கேரளாவில் சில தினங்களாக பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதனை தமிழ்நாட்டில் தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பறவை காய்ச்சலின் எதிரொலியாக தமிழ்நாட்டில் கோழி மற்றும் கோழி முட்டையின் விலை சரிந்துள்ளது.
பறவை காய்ச்சல்:
கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வாத்து மற்றும் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர். தற்போது இதனை கட்டுப்படுத்துவதற்காக கேரளா மாநில அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சல் பரவாமல் இருப்பதற்காக கேரளாவில் இருந்து வரும் கோழிகள் மற்றும் முட்டைகளை தமிழ்நாடு எல்லைக்குள் அனுமதிக்க தடை விதித்துள்ளனர்.
முட்டை மற்றும் கோழியின் விலை வீழ்ச்சி:
பறவை காய்ச்கள் எதிரொலியாக தற்போது முட்டையின் விலை சரிந்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் கோழி முட்டை ஒருங்கிணைப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த குழுவின் தலைவர் மருத்துவர் பி.செல்வராஜ் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. பறவை காய்ச்சல் காரணமாக மக்கள் தற்போது முட்டை வாங்குவதற்கு தயங்கி வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நாமக்கல் மண்டலம் மட்டும் அல்லாமல் அனைத்து மாவட்டங்களில் முட்டையின் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது. பறவை காய்ச்சலின் பாதிப்பு குறையும் வரை முட்டையின் விலையில் மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர். பணியாளர்கள் சந்தை நிலவரத்தின் படி முட்டையின் விலையை முடிவு செய்து கொள்ளலாம் என்று அந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளனர். எனவே தற்போது முட்டையின் விலை 25 காசுகள் குறைந்து ரூ.4.60ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் 50காசுகள் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முட்டையை போலவே கறிக்கோழியின் விலையும் குறைந்து வருகிறது.
மஹாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் தீ விபத்து- 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!!
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் பரவி காய்ச்சல் காரணமாக கறிக்கோழி விற்பனை குறைந்துள்ளது. எனவே தற்போது விலை குறைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி ரூ.20 குறைத்து கறிக்கோழி ரூ.72ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவிற்கு அனுப்பப்பட்ட முட்டைக்கோழிகளின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. கோழிகளை தேக்கம் வைக்காமல் இருப்பதற்கு தற்போது முட்டைக்கோழியின் விலை ரூ.49ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.