14 வது ஐபிஎல் தொடர் – தொடர்ந்து தமிழர்களுக்கு வாய்ப்பளிக்கும் பிரீத்தி ஜிந்தா!!

0

நேற்று சென்னையில் வைத்து இந்த ஆண்டிற்கான ஐபிஎல் மினி ஏலம் நடந்து முடிந்தது. இதில் பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா இந்த முறையும் தமிழக வீரர்களுக்கு அதிக வாய்ப்பை அளித்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ்:

தற்போது இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அந்த போட்டிக்காக நேற்று சென்னையில் வைத்து மினி ஏலம் நடைபெற்றது. இதில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு தேர்வு செய்தனர். மேலும் ஏலம் என்றாலே சென்னை மற்றும் பஞ்சாப் அணிக்கு பெரும் போட்டி நடைபெறும். இந்த இரு அணிகள் தான் ஏலத்தில் போட்டி போட்டு வீரர்களை தேர்வு செய்து வருவார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பஞ்சாப் அணி சிஎஸ்கே அணியை போல் தான் உருவாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது சென்னை அணியை போலவே தனது அணியின் பெயரையும் லோகோவையும் பஞ்சாப் அணி மாற்றியுள்ளது. மேலும் ஏலத்தில் சென்னை அணி எடுக்கும் வீரர்களை தான் பஞ்சாப் அணி எடுக்கும். அதுமட்டுமல்லாமல் பஞ்சாப் அணி தொடர்ந்து தமிழக வீரர்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய நடராஜன் ஐதராபாத் அணிக்கு முன்பு பஞ்சாப் அணியில் தான் இருந்தார்.

பிரீத்தி ஜிந்தா:

அவருக்கு பஞ்சாப் அணி தான் ஐபிஎல் வாழ்க்கையை துவக்கி வைத்தது. இந்த முடிவை அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா எடுத்தார். அதேபோல் டெல்லி அணியில் தமிழக வீரர் அஷ்வினை கேப்டனாக்குவதில் இவர் தான் முனைப்புடன் செயல்பட்டார். இவர் மற்றும் சேவாக் இருவரும் சேர்ந்து தமிழக வீரர்களுக்கு தொடர்ந்து ஊக்கத்தை அளித்து வருகிறார்கள். மேலும் கடந்த ஏலத்தில் எடுத்த முருகன் அஷ்வினை இன்னும் அவர்கள் தங்களது அணியில் வைத்துள்ளார்கள்.

குட்டி பனியனுடன் கவர்ச்சி புகைப்படம் பதிவிட்ட ஷிவானி – சொக்கி போன ரசிகர்கள்!!

அதேபோல் நேற்று நடத்த ஏலத்தில் தமிழக வீரர் ஷாருக் கானை ரூ.5.25 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது. இவரை எடுக்க பஞ்சாப் அணி கடுமையாக போராடியது. இதற்கும் சேவாக் மற்றும் பிரீத்தி ஜிந்தா தான் காரணம். இவர்களுக்கு தமிழக பௌலர்கள் என்றால் பிடிக்குமாம். மேலும் அவர்கள் மீது பெரிய நம்பிக்கையை வைத்துள்ளனர். அதேபோல் தமிழக ஆல் ரௌண்டர்களும் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எண்ணி தான் இவர்கள் இந்த முடிவை எடுத்து வருகிறார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here