இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சி.பி.எஸ்.இ., மத்திய திறந்தவெளி கல்வி அமைப்புகள் மற்றும் பல்வேறு தேர்வு வாரிய பள்ளி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. மேலும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தேர்வுகள் நடைபெற வாய்ப்பில்லை.
புதிய திட்டம்..!
மனிதவள மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரி ஒருவர், தள்ளி வைக்கப்பட்ட அனைத்து தேர்வுகளையும் ஏப்ரல் கடைசி வாரத்தில் தொடங்கி மே மத்தியில் முடிக்கலாம் என திட்டமிட்டு இருக்கிறோம் என தெரிவித்து உள்ளார்.
14-ந்தேதி ஊரடங்கு நிறைவு பெற்றதும் இதுபற்றி அதிகாரிகள் கூடி ஆலோசனை நடத்துவோம். அதில் முடிவு எடுக்கப்பட்டு தேர்வு தேதி அறிவிக்கப்படும். ஏற்கனவே நடந்த தேர்வுகளுக்கான பரீட்சை பேப்பர் திருத்தும் பணி நின்றுவிட்டது, அவையும் தொடங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜூலைக்குள் முடிவு..!
ஏற்கனவே தேசிய தேர்வு ஏஜென்சி (என்.டி.ஏ.) அறிவித்த தேர்வுகளுக்கான விண்ணப்ப காலத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் 7 தேர்வுகளுக்கு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கான தேர்வு தேதியை ஏப்ரல் 15-ந்தேதிக்கு பிறகு முடிவு செய்ய உள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள். இந்த தேர்வுகளும் மே மாதம் வாக்கில் நடைபெறும் என்று தெரிவித்தனர். ஜூன் அல்லது ஜூலை மாதத்துக்குள் எல்லா பணிகளும் முடிந்துவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |