மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்படுகிறதா..? தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவிப்பு..!

0

தொலைத் தொடர்பு நிறுவனங்கள்இன்னும் மூன்று மாதங்களுக்கு கட்டண உயர்வு இருக்காது எனவும் அதற்குள் முன்கூட்டியே ரீசார்ஜ் செய்பவர்கள் மூன்று மாதங்களுக்கு பிறகும் சில நாட்களுக்கு தள்ளிப்போடலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நிபந்தனை..!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு வேறு வழியின்றி கொரோனாவை தடுப்பதற்கு மேற்கொண்ட காரியத்தால் பொதுமக்கள் அன்றாட வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டு பெரும் பொருள் சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சங்க நிர்வாகி தெரிவிக்கையில் இந்திய வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் பாக்கி 1.6 லட்சம் கோடி முதல் 2 லட்சம் கோடி வரை உள்ளது.

எனவே, கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு கட்டணத்தில் தற்போதைக்கு எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்கு உயர்வு இருக்காது..!

ரிசர்வ் வங்கி 3 மாதங்களுக்கு கடன் தவணைகளை வசூலிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. இதே பரிந்துரையை தாங்களும் பின்பற்ற உள்ளோம். எனவே இன்னும் மூன்று மாதங்களுக்கு கட்டண உயர்வு இருக்காது என்று கூறியுள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here