பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழர்களின் வரலாற்றை அடிப்படையாக கொண்டு இயக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் தற்போது பெரும் சாதனையை படைத்துள்ளது.
பொன்னியின் செல்வன்:
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை, அதே பெயரில் திரைப்படமாக இயக்கியுள்ளார் மணிரத்னம். இந்த திரைப்படம், மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த செப்.,30ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது. மேலும் வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி,சோபிதா துலிபாலா, பிரபு, ஆர் சரத்குமார் , விக்ரம் பிரபு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படம் முதல் நாளிலேயே ரூ.80 கோடிக்கு மேல் வசூல் வேட்டையை தொடங்கிய நிலையில், இரண்டாம் நாள் முடிவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலை தாண்டி சாதனை படைத்திருந்தது. இந்நிலையில், மூன்றாம் நாளான நேற்று ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது.
சமந்தாவுடன் சந்தோசமாக இருக்கும் நாகசைதன்யா.., இதுவே நீடிக்காதா?? கண்கலங்கும் ரசிகர்கள்!!
இதன் மூலம் பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் மூன்று நாள் முடிவில் ரூ.230 கோடியை தாண்டி உள்ளது. மூன்றே நாளில் 200 கோடிக்கு மேல் வசூலித்த முதல் தமிழ்படம் என்ற சாதனையை இந்த படம் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.