ரோஹித்துக்கு ஏற்பட்ட அசம்பாவிதம்., பாதி ஆட்டத்தில் வெளியேறிய வீரர்., வீடியோ மூலம் வெளியான உண்மை!!

0
ரோஹித்துக்கு ஏற்பட்ட பிரச்சனை.., சிறிது நேரம் தடைபட்ட ஆட்டம்.., வைரலாகும் வீடியோ!!
ரோஹித்துக்கு ஏற்பட்ட பிரச்சனை.., சிறிது நேரம் தடைபட்ட ஆட்டம்.., வைரலாகும் வீடியோ!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 வது போட்டியில் ரோகித் ஷர்மாவால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தபட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

ரோஹித் சர்மா

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது T20 போட்டி நேற்று அசாம் மாநிலத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 237 ரன்கள் குவித்தனர். இதன் பிறகு களமிறங்கிய தென்னாபிரிக்க அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவரில் 221 ரன்கள் குவித்தனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரை கைப்பற்றினர். இந்த ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது பீல்டிங்கில் நின்று கொண்டிருந்த ரோஹித் ஷர்மாவுக்கு மூக்கில் ரத்தம் வர ஆரம்பித்தது. இதனால் ரோகித் கையில் இருந்த துண்டை வைத்து ரத்தத்தை துடைத்தார்.

இது என்னடா வம்பா போச்சு., ஆட்ட நாயகன் விருது கொடுத்தது தப்பா., KL ராகுல் பேட்டியால் குழம்பிய BCCI!!

ஆனால் தொடர்ந்து ரத்தம் வெளியேறியதால் சிகிச்சை பார்த்து விட்டு பீல்டிங் செய்ய மீண்டும் மைதானத்துக்கு வந்தார். இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதற்கான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இந்த சூழ்நிலையிலும், இந்திய அணிக்காக விளையாடும் விதத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here