நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவருக்கும் விவாகரத்து ஆன நிலையில் , ஒரு புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமந்தா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்களில் சமந்தாவும் ஒருவர். இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானார். இந்த படத்தில் தான் நாகசைதன்யாவுக்கும், சமந்தாகும் இடையில் காதல் மலர்ந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இப்படி அவர்களது வாழ்கை நகர இடையில் என்ன பிரச்சனை வந்தது என்று தெரியவில்லை. இருவரும் மனம் ஒத்து விவாகரத்து வாங்கினர். இவர்கள் பிரிந்த பிறகு சமந்தாவின் மீது பல விமர்சனங்கள் எழுந்தது.
ஆனால் சமந்தா இதை பற்றி கண்டுகொள்ளவில்லை. இந்த சூழலில் சமந்தா, நடிகர் சிம்பு மற்றும் தனது முன்னாள் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் சூட்டிங்கின் போது எடுத்த போட்டோ என்பது குறிப்பிடத்தக்கது.
கணவனை இழந்த நடிகை மீனாவின் அம்மா, சித்தி இப்படி நடிச்சவங்களா? அதுவும் யார் கூட தெரியுமா??
இப்படி இருவரும் ஒத்துமையாக வாழ்ந்த நிலையில் யாரு கண்ணு பட்டுச்சோ இருவரும் பிரிந்து விட்டனர். இந்த சூழலில் சமந்தா மற்றும் நாகசைதன்யா மீண்டும் ஒன்று சேர வேண்டும் என சமந்தாவின் ரசிகர்கள் வேண்டி கொண்டுள்ளனர் .