திரையுலகில் பல இயக்குனர்களின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக உருவானது. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதுமட்டுமின்றி, பாக்ஸ் ஆபிஸிலும் 500 கோடிக்கு மேல் வசூலித்தது. ஆனால், அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் கடைசியில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படக்குழுவினர் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. சொல்லப்போனால் திரைக்கதை, மேக்கிங், சண்டைக் காட்சிகள் என அனைத்துமே கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதனால் இந்த படம் 300 கோடிகளுக்கு மேல் கூட வசூலிக்கவில்லை என கூறப்படுகிறது.
குக் வித் கோமாளி 4ல் சூப்பரான சர்ப்ரைஸ்.., இதை யாருமே எதிர்பார்கலையே.., செம ட்விஸ்ட்!!
இதையடுத்து நேற்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. பொன்னியின் செல்வன் 2. தியேட்டரில் பார்க்காதவர்கள் ஓடிடியில் பார்த்து ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமேசான் ப்ரைம் தளத்திலும் சொல்லும்படி போதிய வரவேற்பு கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. கோடை விடுமுறை என்ற போதிலும் படத்துக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதனால் பொன்னியின் செல்வன் 2 படக்குழுவினரே சோகத்தில் ஆழ்ந்த உள்ளதாக சொல்லப்படுகிறது.