இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு 29,213 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். சிறப்பு பேருந்துகள் இயக்க தற்காலிக பேருந்து நிலையங்கள் இந்த ஆண்டும் அமைக்கப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 12-ம் தேதி முதல் ஜனவரி 21 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிறப்பு பேருந்துகள் முன்பதிவு செய்ய 17 மையங்கள் அமைக்கப்படும்.
மேலும் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தவிர்க்க சிறப்பு பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க 1800 425 6151 என்ற எண் அறிவிக்கப்பட்டுள்ளது.