கைரேகை வைக்காமல் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து தான் முடிவு எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதே போல் பொங்கல் பரிசுகள் வழங்குவது குறித்தும் சில தகவல்களை கூறியுள்ளார்.
பொங்கல் பரிசுகள்:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் அச்சம் காரணமாக பொது முடக்கம் பின்பற்றப்பட்டு வருகின்றது. மக்களின் தேவை மற்றும் பொருளாதார நிலை கருதி தமிழக அரசு சார்பில் பல சலுகைகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கும் பொங்கல் பரிசு ரொக்க தொகையாக 1000 ரூபாய், கரும்பு மற்றும் இதர மளிகை சாமான் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனால், இந்த ஆண்டு மக்களின் பொருளாதார நிலை கருதி ரொக்கமாக 2500 ரூபாய், ஒரு முழு கரும்பு மற்றும் கூடுதல் மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான அரசாணையை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது. இதற்கு தேர்தல் நெருங்கும் சமயத்தில் மக்களுக்கு இலவசம் கொடுத்து ஏமாற்ற பார்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் எடுத்து முன்வைக்கப்பட்டது.
இதற்கிடையில் பொங்கல் பரிசுகளை மக்களுக்கு விநியோகிக்க தீவிரமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு நிருபர்களிடம் பேசினார்.
30 நாட்களாக தொடரும் விவசாயிகளின் போராட்டம்!!
அவர் கூறியதாவது, “மக்கள் அனைவருக்கும் வரும் ஜனவரி 4 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுகள் விநியோகம் ஆர்மபிக்கப்படும். மக்கள் தங்களுக்கான பரிசு டோக்கன்களை நாளை (26/12/2020) முதல் பெற்றுக் கொள்ளலாம். பொங்கல் பரிசுகள் வரும் ஜனவரி 12 ஆம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்கப்பட்டு விடும். ரேஷன் கடைகளில் கைரேகை வைப்பதில் சர்வர் கோளாறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது. அதனால், கைரேகை வைக்காமல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவது குறித்து தமிழக முதல்வரிடம் ஆலோசித்து விரைவாக முடிவு எடுக்கப்படும்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.