‘வீட்டுக்கு மூத்த மகளா இருந்தா, அவங்க தானா என் அம்மா’ – பாரதியிடம் கேள்வி கேட்கும் ஹேமா!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா தீவிரமாக பாரதிக்கும் ஹேமாவிற்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அஞ்சலிக்கும் அகிலனுக்கும் சண்டை ஏற்படுகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் முந்தைய எபிசோடில் லட்சுமி, கண்ணம்மாவிடம் வந்து தன் அப்பா துபாயில் தான் இருக்கிறாரா?? எனக்கு சந்தேகமாக இருப்பதாக சொல்கிறார். கண்ணம்மா இதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார். மறுபக்கம் சௌந்தர்யா கண்ணம்மாவை தேடி ஒவ்வொரு கிராமமாக கேம்ப் நடத்துகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எப்படியாவது ஹேமாவை, கண்ணம்மாவிடம் சேர்த்து விட வேண்டும் என்று கூறுகிறார். வேணுவும் சௌந்தர்யாவிடம் எவ்வளவோ எடுத்து சொல்ல கடைசியில் சௌந்தர்யா சொல்வதற்கு ஒத்துக்கொள்கிறார். இன்றைய எபிசோடில் கண்ணம்மா தைத்துக் கொண்டிருக்கும் போது வழக்கம் போல இருமல், மயக்கம் ஏற்படுகிறது.

இதனை பார்த்த துளசி பதற இன்னும் சரியாகவில்லையா?? உன்ன நம்பி ஒரு குழந்தை இருக்கா. நீ இப்படி உடம்பு சரியில்லாமல் இருந்தா என்ன ஆகுறது என்று சொல்கிறார். அடுத்து துளசியும் வேலைக்கு செல்கிறார். லட்சுமி கண்ணம்மா இருமுவதை பார்த்து மாத்திரை எடுத்து தருகிறார். மறுபடியும் சௌந்தர்யாவின் நினைப்பு வருகிறது.

கைரேகை வைக்காமல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கலாமா??

அடுத்ததாக அகிலனும், அஞ்சலியும் ரூமில் இருக்க அகிலன் அஞ்சலியிடம் மிகவும் அழகாக இருப்பதாக சொல்கிறார். அஞ்சலி வெக்கப்படுகிறார். நீ இன்னும் அழகா இருக்குறதுக்கு ஒரு டிப்ஸ் சொல்லவா?? என்று கேட்க அஞ்சலியும் ஆர்வமாக கேட்கிறார்.

நீ இனிமேல் உங்க அம்மா கிட்ட பேசக் கூடாது என்று சொல்கிறார். இதனால் அஞ்சலியும் அதிர்ச்சியாகிறார். வீட்டுல நாய் குட்டி வளர்த்தாலும், 5 வருசத்துல அது மேல நமக்கு அவோளோ பாசம் வரும். ஆனால் ஹேமா வந்து 8 வருஷம் ஆகியும் நீ அவளை வெறுக்க தான் செய்ற அதுக்கு காரணம் உங்க அம்மா என்று சொல்ல அஞ்சலி பேசாமல் இருக்கிறார்.

மறுபக்கம் இத்தனை நாள் நடந்த சண்டையில் மூத்த மருமகள் என்று சௌந்தர்யா சொன்னதை தன் அம்மாவை பற்றி தான் பேசுகிறார்கள் என்று நினைத்து பாரதியிடமே கேட்டு விடுகிறார். பாரதியும் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார்.

அதன் பிறகு வெண்பா வழக்கம் போல சதித்திட்டத்தை தீட்டுகிறார். சௌந்தர்யாவிற்கு தெரிந்த ஒரு பெண்ணிடம் காசு கொடுத்து வெண்பாவிற்கும், பாரதிக்கும் கல்யாணம் ஆகிடுச்சா என்று கேட்க சொல்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here