சச்சினுக்கு பிறகு ‘தல’ தோனி தான்….,முன்னாள் மும்பை வீரர் புகழாரம்…..,

0
சச்சினுக்கு பிறகு 'தல' தோனி தான்....,முன்னாள் மும்பை வீரர் புகழாரம்.....,
சச்சினுக்கு பிறகு 'தல' தோனி தான்....,முன்னாள் மும்பை வீரர் புகழாரம்.....,

இந்திய கிரிக்கெட்டில் சச்சினுக்கு பிறகு தோனிக்குத் தான் ரசிகர்களின் ஆதரவு இருக்கிறது என மும்பை அணியின் முன்னாள் வீரர் பொல்லார்டு கூறியுள்ளார்.

தல தோனி

இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில் அதிக பலம் வாய்ந்த அணிகளாக திகழ்வது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தான். இந்த இரண்டு அணிகளும் சேர்ந்து சுமார் 9 முறை IPL ட்ராபிகளை வென்றுள்ளது. தவிர, இந்த இரண்டு அணிகளுக்காக இந்திய கிரிக்கெட்டின் பெரிய, பெரிய ஜாம்பவான்கள் விளையாடியுள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்திய கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் பல ஆண்டுகள் விளையாடி இருக்கிறார். அதே போல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கூல் கேப்டன் ‘தல’ தோனி தற்போது விளையாடி வருகிறார். இவர்கள் இருவருக்காக மட்டும் இந்த இரண்டு அணிகளையும் சர்ப்போர்ட் செய்யும் ரசிகர்கள் ஏராளம்.

‘விடுதலை’ படக்குழுவை சந்தித்த ரஜினிகாந்த்…, வைரலாகும் புகைப்படம்….,

இப்படி இருக்க, சச்சினுக்கு பிறகு தோனிக்கு தான் இந்தியா முழுவதும் ஆதரவு இருக்கிறது என்று கூறியுள்ளார் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரர் கீரன் பொல்லார்டு. அதாவது, ‘தோனி எங்கு சென்றாலும் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு இருக்கிறது. ஏனென்றால், அவர் அணிக்காக நிறைய செய்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்னர் சச்சின் எங்கள் அணிக்காக விளையாடிய போது நாங்கள் அந்த ஆதரவை உணர்ந்தோம்’ என்று கூறி நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here