இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தைப் பொறுத்தவரை பாதிப்பு மற்றும் உயிரிழப்பு என அனைத்திலும் மஹாராஷ்டிரா மாநிலம் தான் முதலிடத்தில் உள்ளது. அங்கு நாளுக்குநாள் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் ஊரடங்கை மீறி வெளியே வருபவர்களை காவல்துறையினர் புதிய முறையில் கையாண்டு வருகின்றனர்.
ஆரத்தி எடுக்கும் போலீஸ்:
மஹாராஷ்டிராவில் இதுவரை 4666 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அங்கு இதுவரை 232 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் 572 பேர் குணமடைந்து உள்ளனர். இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் அதைப் பொருட்படுத்தாமல் மக்கள் தினமும் சாலையில் சுற்றுவதைப் பார்க்க முடிகிறது. அவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினரும் புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் தானேவில் காலை ஊரடங்கை மீறி நடைப்பயிற்சி சென்றவர்களை பெண் போலீசார் ஒருவர் ஆரத்தி எடுத்து வரவேற்று, பின்பு அவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு புத்திமதிகளை கூறி அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |