அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டுவந்த எமெர்ஜென்சி எனப்படும் அவசரநிலை கொண்டு வரப்பட்டு 45 ஆண்டுகள் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து பிரதமர் தன் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர், தன் ட்விட்டர் பக்கத்தில்.
அன்றைய பிரதமர்:
உத்தர பிரதேசத்தில் உள்ள ரேபரலி தொகுதியில் இந்திரா காந்தி எம்.பி ஆக வெற்றி பெற்றார். ஆனால், அது செல்லுபடியாகாது என்றும் அவரது எம்.பி பதவியை பறித்தது அலகபாத் உயர்நீதிமன்றம். ஆனால், அதிரைக்கு அடுத்த நாள் உச்சநீதி மன்றம் பிரதமராக இந்திரா காந்தி தொடரலாம் என்று உத்தரவிட்டது. இதனை உச்சநீதி மன்றம் 1975-ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி அன்று சொன்னது.
அதற்கு அடுத்த நாள் அதாவது 25 ஆம் தேதி ஜூன் மாதம் இந்திரா காந்தி எமெர்ஜென்சி எனப்படும் அவசரநிலையை நள்ளிரவு பிரகடனம் படுத்தினர். இது 1977 ஆம் ஆண்டு மார்ச் 21 அம் தேதி வரை அமலில் இருந்தது. இந்த காலகட்டத்தின் போது பல எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
பத்திரிகை போன்ற தொடர்புகள் முடக்கப்பட்டன. மக்கள் பேச்சுசுதந்திரம் கூட இல்லாமல் அவதிபட்டு உள்ளனர். பல மக்களின் நீடித்த முயற்ச்சியால் அவசரநிலை நீக்கப்பட்டது. அது நிறைவடைந்து 45 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
பிரதமர் ட்வீட்:
ஏற்கனவே பிரதமர் இது பற்றி குறிப்பிட்டு உள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது ” 1975 முதல் 1977 வரை அவசரநிலை இருந்த நாட்கள் “ஒரு இருண்ட காலம்” . இந்த அவசரநிலை மூலமாக சித்திரவதைகளை அனுபவித்து வந்த மக்கள் அனைவரையும் நான் வணங்குகிறேன். அவர்களின் தயக்கத்தை நாடு ஒரு பொது மறக்காது. அவர்கள் ஜனநாயகத்திற்காக போராடியவர்கள்” என்று கூறியுள்ளார்.