நடிகை மாளவிகா மோகனன் தனது சமூக வலைதளம் பக்கத்தில் விஜய் பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை மாளவிகா மோகன்..!
மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடுத்துள்ளார்.
இவர் தற்போது விஜய் பற்றி வெளியிட்டுள்ள பதிவில் நான் மாஸ்டர் படத்தின் பூஜை அன்று சந்தித்த போது சந்தோஷத்துடனும், லேசான பயத்துடனும் அவர் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தேன். ஆனால் அன்று முழுவதும் எங்களுக்கு பேசும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
விஜய் என் வாழ்வில் முக்கிய அங்கமாக மாறிவிட்டார்..!
ஆனால் அடுத்த ஆறு மாதங்களில் விஜய் எனது வாழ்வில் முக்கிய அங்கமாக மாறிவிட்டார். அன்றாடம் சில வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ள விரும்புவார். மிகவும் அன்பானவர், தயிர் சாதம் என்றால் விரும்பி சாப்பிடுவார்.
ஒவ்வொரு செயலுக்கும் அதன் நேர்மறை பக்கத்தை சுட்டிக்காட்டுவார். மிகவும் அளவாக பேசுவார். ஆனால், அவரைப்போல் சொன்ன வார்த்தையையும், வாக்குகளையும் நினைவில் வைத்து, தகுந்த சந்தர்ப்பத்தில் அதை நிறைவேற்றும் யாரையும் நான் சமீபத்தில் பார்த்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.