தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி….., காரணம் இது தான்…,

0
தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி....., காரணம் இது தான்...,
தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி....., காரணம் இது தான்...,

சமீபத்தில் ஆஸ்கார் விருது வென்ற ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப் பட நடிகர்களை சந்திப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்.

மோடி வருகை

பிரிசில்லா கோன்சால்வ்ஸின் கதை மற்றும் கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கத்தில் உருவான ஆவணப் படம் ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் மொழி அகாடமி விருது பெற்ற இந்த ஆவணப்படம், ஒரு வயதான தம்பதியரின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்ட ஒரு அனாதை யானை ரகு மற்றும் அவர்களுக்கு இடையே ஏற்படும் பிணைப்பை கூறும் வகையில் இருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இக்கதையின் முக்கிய கதாப்பாத்திரங்களில் பொம்மன், பெள்ளி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த ஆவணப் படம், சினிமா உலகின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதினை சமீபத்தில் வென்றது. இந்த வெற்றியை அடுத்து ‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளியை சந்திக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Friends படத்தில் சின்ன வயசு விஜய் இப்போ ரோட்டுல என்ன பண்றாரு தெரியுமா?? ஷாக் வீடியோ…,

அந்த வகையில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதியன்று நீலகிரி மாவட்டம் முதுமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தருவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தின் புதிய கட்டிடம் திறப்பு விழா மற்றும் சென்னை முதல் கோவைக்கு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here