ஈரமான ரோஜாவே சீரியலில் சீரியலில் இப்பொழுது தான் எல்லா பிரச்சனையும் முடிந்து காவியாவும் பார்த்திபனும் சேர்ந்துள்ளனர். மேலும் பார்வதியும் காவியாவை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டுள்ளார். ஏனெனில் ஜீவா தான் காவியாவின் முன்னாள் காதலன் என்ற உண்மை பார்வதிக்கு தெரிந்து விட்டது.
மேலும் இன்று வெளியான ப்ரோமோவில் கூட பார்வதி காவியாவிடம் பார்த்திபனுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் மறைத்து விடு என்று கூறியிருப்பார். காவ்யா என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளார். இப்படி இருக்க இப்பொழுது மீண்டும் ஒரு பிரச்சனை தலைதூக்கவுள்ளது.
அதாவது பிரியாவிற்கு ஜீவா காதலித்தது காவியா தான் என்ற உண்மை தெரியப்போகிறதாம். இப்பொழுது தான் ஜீவா மீது இருக்கும் கோவம் குறைந்து கொஞ்சம் கொஞ்சம் காதல் மலர்ந்திருக்கும் நிலையில் ப்ரியாவிற்கு இது பேரிடியாக தான் இருக்க போகிறது. அதுமட்டுமின்றி காவியா வாழ்க்கை தன்னால் தான் அவ்வளவு கஷ்டம் என்று குற்ற உணர்ச்சியில் இருப்பாராம். இவர்கள் இருவரும் எப்படி சேருவார்கள் என்பது வைத்து அடுத்து கதை நகருமாம்.