நாடு முழுவதும் உள்ள பெண்கள், பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த பாலியல் வன்கொடுமைகள் பல பெண்கள் வெளியே செல்வதற்கு கூட அச்சப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். பெண்களின் பாதுகாப்புக்காக மத்திய, மாநில அரசும் பல அதிரடி தண்டனைகளை செயல்படுத்தி தான் வருகிறது. இருந்தாலும் தொடர்ந்து தவறுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் தற்போது கேரளாவில் ஒரு நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கேரளாவை சேர்ந்த ஒருவர் உறவுக்கார சிறுமியை 9 வருடங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். தற்போது இந்த விஷயம் வெளியே தெரிய காசர்கோடு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி காமக்கொடூரனுக்கு 97 வருட சிறை தண்டனையும், 8 லட்சம் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளார். மேலும் இந்த அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 8.5 வருட சிறை தண்டனையும் வழங்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் இந்த வழித்தடங்களில் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம்., ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!!