நாடு முழுவதும் பெண்கள், முதியவர்கள் என பலரும் தொலைதூர பயணங்களுக்கு ரயில் பயணங்களையே மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக நாளுக்கு நாள் ரயில் பயனாளர்கள் அதிகரித்து வருவதால், பல முக்கிய வழித்தடங்களிலும் புதிய விரைவு ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது எர்ணாகுளம் to வேளாங்கண்ணி வழித்தடங்களில் புதிய விரைவு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த ரயில் எர்ணாகுளத்தில் இருந்து வாரந்தோறும் திங்கள் மற்றும் சனிக்கிழமை மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 05.50 மணிக்கு வேளாங்கண்ணி ரயில் நிலையத்தை சென்றடையும். அதேபோல் வேளாங்கண்ணியில் இருந்து செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை 06.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12 மணிக்கு எர்ணாகுளம் ரயில் நிலையத்தை சென்றடையும் என தெரிவித்துள்ளனர்.