மெட்ரோ ரயில் ரயில் நிர்வாகமானது பொது மக்களின் பயணத்தை எளிமையாக்கும் வகையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில், சென்னையில் சிறப்பாக செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்குவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில், முதல் கட்டப் பணிகள் முழுமையாக முடிவடைய உள்ள நிலையில், இரண்டாம் கட்ட பணிகள் தொடங்குவதற்கான திட்டமிடல்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த இரண்டாம் கட்ட பணிகள் குறித்து மெட்ரோ நிர்வாகம் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது, மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்ல சிறிய ரக மின்சார பேருந்துகள் மற்றும் மின்சார ஆட்டோக்களை இயக்க தமிழக அரசிடம் அனுமதி கோரி உள்ளதாகவும், அதற்கான வழித்தடங்கள், வாகனங்கள் கொள்முதல், இயக்கம், வாகனங்களுக்கான கட்டணங்கள் உள்ளிட்டவை திட்டமிட்ட பின்னர் முழு விவரமும் தெரிவிக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான நிலையத்திலிருந்து மெட்ரோ ரயில் நிலையத்தை அடைவதற்காக தனி பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டங்களுக்காக தமிழக மாநகர பேருந்து கழகத்துடன் இணைந்து முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்.., இனி இந்த சலுகை இவர்களுக்கு மட்டும் தான்.., பகீர் அறிவிப்பு!!!