பெரம்பலூர் அருகே கடந்த சில நாட்களுக்கு முன் கடல் வாழ் உயிரினங்களின் படிவங்கள் மற்றும் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனை அடுத்து அனைவரும் அதனை டினோஸுரின் முட்டைகள் என்று கூறினர். ஆனால், அது டைனோசரின் முட்டைகள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
பெரம்பலூர் அருகே அதிசயம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு பள்ளிக்கு அருகே உள்ள ஏரியில் குடிமராமத்து பணிகளுக்காக அங்கிருந்தவர்கள் மண் எடுக்க குழி தோண்டியுள்ளனர். தோண்டி எடுத்து பார்க்கும் போது பல ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதேபோல் கடல் வாழ் மீன் வகை உயிரினங்களின் படிமங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
முட்டைகளை அங்கிருந்தவர்கள் டைனோசரின் முட்டைகள் என்று கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த ஆராய்ச்சியும் நடைபெற்று வந்தது. இதனை அடுத்து தற்போது அது டைனோசரின் முட்டைகள் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இது குறித்து திருச்சி அரசு அருங்காட்சியத்தின் காப்பாட்சியர் சிவகுமார் மற்றும் அரியலூர் மாவட்ட புதைஅருங்காட்சியக அதிகாரிகள் கூறியதாவது பெரம்பலூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட முட்டைகள் யாவும் டைனோசரின் முட்டைகள் கிடையாது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
அவை அனைத்தும் கடல் வாழ் உயிரினங்களின் ஓடுகள் மற்றும் கிளிஞ்சல்கள் ஆகும். ஆணையாளர் சண்முகத்திற்கு ஆய்வு தொடர்பான அறிக்கையினை விரைவில் சமர்ப்பிக்க உள்ளோம்.