கொரோனா ஒழியும் வரை ‘நோ ஸ்கூல்’ – பெற்றோர் சங்கம் முடிவு..!

0
மாநிலம் முழுவதும் இனி மதியம் வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும் - அரசு புதிய உத்தரவு!!
மாநிலம் முழுவதும் இனி மதியம் வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும் - அரசு புதிய உத்தரவு!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் முற்றிலுமாக ஒழியும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பல்வேறு மாநில பெற்றோர் சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகள் வேண்டாம்:

இந்தியாவில் இன்று (ஜூன் 1) முதல் அன்லாக் 1.0 எனும் பெயரில் பல்வேறு தளர்வுகளுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து வரும் ஜூலை மாதம் முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. இதற்கு பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இதனால் பல்வேறு பள்ளிகளின் பெற்றோர் சங்கங்கள் சார்பில் change.org எனும் பெயரில் இணையதளம் தொடங்கப்பட்டு கொரோனா முற்றிலுமாக ஒழியும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என கோரிக்கை முன் வைக்கப்பட்டு உள்ளது. அதில் கொரோனா முற்றிலும் ஒழியும் வரை அல்லது கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பள்ளிகளை திறப்பது என்பது மோசமான திட்டம் என கூறப்பட்டு உள்ளது.

கோரிக்கை மனுவில், பள்ளிகளை திறப்பதற்கு பதிலாக ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம் எனவும், அது சிறப்பாக நடைபெறும் பட்சத்தில் வரும் கல்வியாண்டை அது வாயிலாகவே தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மனுவில் இதுவரை 2.57 லட்சம் பேர் கையெழுத்திட்டு உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here