ஐநா சபையால் பால் மற்றும் உலக உணவாக அதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஜூன் 1 உலக பால் தினமாக அங்கிகரிக்கப்பட்டது.இதன்படி 2001-ஆம் ஆண்டிலிருந்து ‘உலக பால் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.கடந்த சில ஆண்டுகளில் 150 மில்லியன் டன்களுக்கும் அதிகமான உற்பத்தியையும், ஒரு நாளைக்கு 300 கிராமுக்கும் அதிகமான தனிநபர் கிடைப்பையும் கொண்ட இந்தியா உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக மாறியுள்ளது.
பாலின் சிறப்பம்சம்
தாய்ப்பால் வழி தொடரும் இந்த திரவ உணவு பின்னர் மாட்டுப்பால் மூலமாக நமக்கு கிடைக்கிறது. உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் பால் மிகவும் முக்கியமானது ஆகும்,காலையில் டி,காபியில் தொடங்கி இரவு தூங்க போவதற்கு முன் வரை பால் அருந்தாத மனிதர்கள் இல்லை இன்று.
இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பால்.5 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள், தினமும் 400 மி.லி பால் குடிப்பது நல்லது.40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பால் உட்கொள்வது சிறந்தது.இளம் வயதினர் மிதமான கொழுப்புள்ள பாலையும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைந்த கொழுப்புள்ள பாலையும், வயதானவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலையும் குடிப்பது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எம்.வெங்கையா நாயுடு பாராட்டு
இந்தியாவின் துணைத் தலைவர் எம்.வெங்கையா உலக பால் தினத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “உலக பால் தினத்திற்கு வாழ்த்துக்கள். இந்த நாள் பாலின் முக்கியத்துவத்தை உலகளாவிய உணவாக அங்கீகரிக்கிறது, மேலும் பால் துறையை கொண்டாடுகிறது. உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது, பால்வளர்ப்பு நமது கிராமப்புற பொருளாதாரத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. #WorldMilkDay”இந்த நாளை இன்னும் சிறப்பானதாக்க கொரோனா வைரஸ் வெடித்ததால் தேவைப்படும் மக்களுக்கு பால் பாக்கெட்டுகளை நன்கொடையாக வழங்குங்கள் என பதிவிட்டுள்ளார்
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |