இந்தியாவில் தொடர்ந்து 3 மாதங்களாக குறைக்கப்பட்டு வந்த மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, இன்று தீடிரென உயர்த்தப்பட்டு உள்ளது.
சமையல் எரிவாயு:
இந்தியாவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தை நிலவரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. இந்தியாவில் ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. அதற்கு அதிகமாக சிலிண்டர் வாங்குபவர்களுக்கு மானியமில்லாத விலையில் சமையல் எரிவாயு வழங்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களாக இதன் விலை குறைந்து கொண்டே வந்தது.
இந்நிலையில் இன்று (ஜூன் 1) முதல் மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 11.50 உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் சென்னையில் மானியமில்லாத எரிவாயு சிலிண்டர் விலை ரூ.606.50 ஆக அதிகரித்து உள்ளது. புதுதில்லியில் ரூ.593, கொல்கத்தாவில் ரூ.616 மற்றும் மும்பையில் ரூ.509.50 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |