இங்கிலீஷில் பேசும் கதிர் – ஆச்சரியத்தில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” குடும்பம்!!

0

கஸ்தூரி ஜெகாவின் சண்டையை தீர்க்கப்போய் மூர்த்தி தனத்திற்கு இடையே சண்டை வருகிறது. இதை சரி செய்ய வரும் கதிர் இங்கிலீஷில் பேச முல்லை கை தட்டி உற்சாகப்படுகிறார். பிறகு வீட்டில் பொய் சொல்லிவிட்டு கதிரை பள்ளிக்கு அழைத்து செல்கிறார் முல்லை.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸில் கதிர் படிக்கிறேன் என ஒத்துக்கொள்ள முல்லை ஏக சந்தோஷத்தில் உள்ளார். ஜெகாவுடன் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த கஸ்தூரியை தேடி ஜெகா மூர்த்தியின் வீட்டுக்கு வருகிறார். கஸ்தூரி மற்றும் ஜெகாவின் சண்டையை சரி செய்ய போய் மூர்த்தி மற்றும் தனத்திற்கு இடையே சண்டை வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நீங்க எதுக்கு இப்போ அண்ணனுக்கு சப்போர்ட் பண்றீங்க என தனம் கேட்க நீ சும்மா ஏன் கத்திட்டு இருக்க கஸ்தூரி என மூர்த்தி கேட்க இருவருக்கும் சண்டை வருகிறது. இதைப்பார்த்து முழு குடும்பமும் கலாய்க்கிறது. இருவர் சண்டை மாறி நால்வர் சண்டையாக மாற கதிர் நடுவில் சென்று நான்சென்ஸ் என கூறி சண்டையை நிறுத்துகிறார்.

கதிர் இங்கிலீஷில் பேசுவதை கேட்டு முழு குடும்பமும் ஆச்சரியப்படுகிறது. இப்படி நீங்க சண்டை போட்டீங்கன்னா நாங்க எங்க போறது என மீனா கூற பேசி சமாதானமாகி சண்டை முடிவுக்கு வருகிறது. பிறகு கஸ்தூரியின் சண்டையை நினைத்து சிரித்து கொண்டிருக்கிறார்கள் மூர்த்தியும் தனமும்.

சமையல் போட்டியை விட்டு விலகும் கண்ணம்மா – விறுவிறுப்பான ட்விஸ்டுகளுடன் மெகா சங்கமம்!!

கஸ்தூரி வீட்டை விட்டு வெளியே வந்ததும் யாரும் தேடலியா என மீனா கேட்க, நான் அம்மாகிட்ட சொல்லிட்டேன் என தனம் கூற, நானும் ஐஸ்வர்யாகிட்ட சொல்லிட்டேன் என கண்ணன் கூறுகிறார். பிறகு ஐஸ்வர்யாவிடம் பேசியதற்காக மீனா, மூர்த்தி, தனம் மூவரும் சேர்ந்து கண்ணனை நீ சரி இல்லை என திட்டுகிறார்கள்.

கண்ணனுக்கு, ஐஸ்வர்யா மாமா முறை தானே, பேசாம கண்ணனுக்கு ஐஸ்வர்யாவை கட்டி வைக்கலாமே என மீனா கூற, அந்த குடும்பத்துல எல்லாம் பொண்ணு எடுக்க வேண்டாம் என தனம் கூறுகிறார். கண்ணன் கல்யாணத்தை சிறப்பாக செய்யணும் என தனம் கூற மிரண்டு போகிறார் கண்ணன். பிறகு ரூமில் கண்ணாடி முன் நின்று கதிர் செய்வதை போலவே திரும்ப செய்து விளையாடுகிறார் முல்லை.

பிறகு பள்ளிக்கூடத்திலிருக்கிற டிசியை வாங்கி வர இன்னிக்கே போகலாம் என முல்லை கூற இன்னைக்கு வேணாம் என கதிர் கூறுகிறார். அக்கா என்ன சொன்னாலும் மாமா கேக்குறாங்க, என்ன பாக்க பாவமா இல்லையா என முல்லை கேட்க அப்படி கெஞ்சாத என கதிர் கூறுகிறார். பிறகு கதிரை வெளியே கூட்டி வந்த முல்லை அம்மாவை பாக்க வீட்டுக்கு போயிட்டு வரேன் என தனத்திடம் கூறுகிறார். அப்போது கதிர் முழிக்க இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here