சமையல் போட்டியை விட்டு விலகும் கண்ணம்மா – விறுவிறுப்பான ட்விஸ்டுகளுடன் மெகா சங்கமம்!!

0

மெகா சங்கமத்தில் நடந்து வரும் போட்டிகளில் இன்று சமையல் போட்டி நடைபெறவுள்ளது. அந்த போட்டியில் கண்ணம்மாவின் சமையலில் கரப்பான் பூச்சி விழுந்து விட போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிக்கிறார் கண்ணம்மா.

மெகா சங்கமம்

பாரதி கண்ணம்மாவில் இன்று நடக்கவுள்ள சமையல் போட்டியில் கண்ணம்மாவை தோற்கடிக்க வேண்டும் என ஒரு பக்கம் வெண்பாவும் மறுபக்கத்தில் சந்தியாவை தோற்கடிக்க பார்வதியும் திட்டம் போடுகிறார்கள். இந்த போட்டியில் கலந்து கொள்ளும் ஜோடிகளில் யாராவது ஒருவர் தான் பங்குபெற முடியும் என கூறப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் பார்வதி, வெண்பாவின் சதியை மீறி கண்ணம்மாவும், சந்தியாவும் ஜெயிப்பார்களா என ஒளிபரப்பாக உள்ளது இன்றைய தொடர். போட்டி ஆரம்பித்ததும் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் குலுக்கலில் என் பெயர் வந்துரக்கூடாது என சந்தியா சாமி கும்பிட்டு கொள்கிறார்.

ஆனால் சிவகாமி குடும்பத்தின் சார்பில் சமையல் போட்டியில் பங்குபெற சந்தியாவின் பெயர் வந்துவிட பயந்து விடுகிறார் அவர். அடுத்ததாக பாரதி கண்ணம்மா குடும்பத்தில் கண்ணம்மாவின் பெயர் செலக்ட்டாகிறது. பிறகு சமையல் போட்டியில் டோக்கன் கொடுத்து யாரு யாருக்கு என்னென்ன டேபிள் என பிரித்து விடப்படுகிறது.

அதில் சந்தியாவுக்கு 5ஆவது டோக்கனும் கண்ணம்மாவுக்கு 4ஆவது டோக்கனும் கிடைக்கிறது. டோக்கனை பிரித்து பார்த்தால் கண்ணம்மாவுக்கு பிரியாணியும், சந்தியாவுக்கு ஸ்வீட்டும் வந்திருக்கிறது. அதில் ஸ்வீட் என்ற பெயரை பார்த்ததும் பயந்து விடுகிறார் சந்தியா. இந்த சமையல் போட்டிக்கு ஜட்ஜ்ஜாக பிக்பாஸ் சுரேஷ் வந்துள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஷிவாங்கி, பாலா, சரத் அனைவரும் மேடைக்கு வர போட்டி ஆரம்பமாகிறது. பிறகு போட்டி நடக்கப்போகும் இடத்திலிருந்து கிளம்பும் பார்வதியும் வெண்பாவும் செஃப்பை சந்திக்கிறார்கள். சந்தியா ஸ்வீட்டில் மைதாவுக்கு பதிலாக அரிசி மாவை கலந்து விட சொல்லுகிறார் பார்வதி.

வெண்பாவும், கண்ணம்மா செய்யும் பிரியாணியில் கரப்பான் பூச்சியை போட்டுவிட சொல்லி அனுப்பி விடுகிறார். பிறகு போட்டி நடக்கும் இடத்தில் சிறப்பு விருந்தினராக வந்த மூன்று கோமாளிகளும் போட்டியாளர்களை கலாய்த்து வருகின்றனர். சந்தியா, மைதாவுக்கு பதிலாக மாற்றி வைத்த அரிசி மாவை எடுத்து வந்து ஸ்வீட் செய்ய துவங்குகிறார்.

பிறகு போட்டி முடிவில் கண்ணம்மா என்னாச்சு ஏன் முழிச்சுட்டு இருக்கீங்க என சுரேஷ் கேட்கவும் பாத்திரத்தில் கரப்பான் பூச்சி இருப்பதை கூறுகிறார் கண்ணம்மா. அதெப்படி பாத்திரத்தில் கரப்பான் பூச்சி வந்தது என அனைவரும் குழம்புகின்றனர். அதனால் போட்டியிலிருந்து விலகுவதாக கூறுகிறார் கண்ணம்மா.

பிறகு சாப்பாடு டேஸ்ட்டிங்கின் போது சந்தியாவின் அரிசி மாவு ஸ்வீட் தாறுமாறா இருக்கு என சுரேஷ் பாராட்டுகிறார். சமையலில் நேர்மையாக நடந்ததாக கூறி கண்ணம்மா இந்த நிகழ்ச்சியில் தொடர வேண்டும் என்று அறிவிக்கிறார் சுரேஷ். பிறகு சமையல் போட்டியில் சந்தியா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுகிறது.

போட்டியில் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் சரவணனுடன் பேசிக்கொண்டிருக்கிறார் சந்தியா. பிறகு போட்டியில் ஜெயிச்சதை பார்க்க அத்தை இல்லையே என சரவணனிடம் கூறி வருத்தப்படுகிறார். பின்பு கண்ணம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கும் துளசி போட்டியில் ஜெயிக்க உன் நல்ல மனசு தான் காரணம் கண்ணம்மா என கூறுகிறார்.

அப்போது அங்கு வரும் சௌந்தர்யாவும் துளசியுடன் சேர்ந்து கண்ணம்மாவின் நேர்மையான குணத்தை பாராட்டுகிறார். கண்ணம்மா தான் உங்க மருமகளா என எல்லாரும் கேட்டு பாராட்டிட்டு போறாங்க. உன்கிட்ட எனக்கு பிடிச்சதே இந்த நேர்மை தான் என சௌந்தர்யா பேசுகிறார்.

இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டும் தான் மிச்சம் இருக்கு அதிலும் நீ சிறப்பா விளையாடி சிறந்த குடும்பம் என்ற பரிசை நாம தான் ஜெயிக்கனும் என சௌந்தர்யா கூற கண்டிப்பா ஜெயிப்போம் என கண்ணம்மா சொல்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here