நமது நாட்டின் பிரதமரின் நிகழ்ச்சிக்கு பங்கேற்பதற்காக சென்ற தமிழகத்தின் சபாநாயகர் தனபால் சென்று கார் தற்போது விபத்துக்குளாகியுள்ளது. இதனால் அங்கு பரபரப்பாகியுள்ளது.
திருப்பூர்:
இன்று தமிழகத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி முதலாவதாக கேரளா பாலக்காட்டிற்கு சென்று பிரச்சார வேளைகளில் ஈடுபட்டு வருகிறார். இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் திருப்பூர் தாராபுரத்தில் அதிமுக மற்றும் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளார். இந்த நிகழ்ச்சி இன்று பிற்பகல் 12.50 மணிக்கு தாராபுரத்தில் வைத்து துவங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் அமைச்சர் வேலுமணி மற்றும் சபாநாயகர் தனபால் கார் மூலம் சென்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மோடி வருகை எதிரொலி – #GoBackModi என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்!!
இவர்கள் கோவையில் இருந்து கார் மூலம் சென்றனர். தாராபுரத்திற்கு செல்லும் வழியில் யாரும் எதிர்பாராத வகையில் இவர்கள் சென்று கார் விபத்துக்குள்ளாக்கியது. அதாவது இவர்களின் பாதுகாப்பிற்காக முன்பு சென்ற 2 கார்கள் விபத்துக்குள்ளாக்கியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. யாருக்கும் எந்த காயமும் ஏற்படாமல் தற்போது பாதுகாப்பு காரணமாக சபாநாயகர் மற்றும் வேலுமணி வேறு காரில் மாற்றப்பட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு செல்கின்றனர்.