பீரோவில் வைத்த பணத்தை காணவில்லை என முல்லை அழுது கொண்டிருக்கிறார். அழுது கொண்டிருக்கும் முல்லையை தனம் சமாதானப்படுத்த, முல்லை தான் ஒருவேளை பணத்தை எடுத்திருப்பாரோ என்று மீனா சந்தேகப்படுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோடில் பீரோவில் வைத்த பணத்தை காணவில்லை என முல்லை பதட்டத்துடன் கூறுகிறார். தனம் வந்து பணத்தை தேடும் போது பணம் கிடைக்கவில்லை. பணத்தை காணவில்லை என மூர்த்தியிடம் வந்து தனம் சொல்ல நன்றாக தேடிப்பார்க்க சொல்லுகிறார் லட்சுமி.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அப்போது அங்கிருந்து கிளம்பும் கண்ணன், கிணற்றின் அருகில் நின்று கொண்டு பணத்தை எடுத்தது தப்பு, ஏண்டா நீ இப்படி பண்ண என்று அவரையே திட்டிக்கொள்கிறார். பணத்தை தேட சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்புகிறார் மூர்த்தி. தனம், முல்லை, மீனா மூவரும் சேர்ந்து பணத்தை தேடுகிறார்கள். பணத்தை காணவில்லை என முல்லை அழுது கொண்டிருக்கிறார்.
ஒருவேளை பணத்தை நீங்க உங்க ரூம்ல கொண்டு போய் வைச்சீங்களா என மீனா கேட்க, முல்லை இல்லை என கூறி மறுக்கிறார். அப்போது அங்கு வரும் கண்ணன், நான் காலேஜுக்கு கிளம்புகிறேன் அண்ணி என தனத்திடம் கூறி விட்டு குற்ற உணர்ச்சியால் அவர் தரும் பணத்தை வேண்டாம் என கூறிவிட்டு கிளம்புகிறார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!
ஜனார்த்தனன் வேலை விஷயமாக வெளிய கிளம்பும்போது, ஜீவாவை கடையை பார்த்துக்கொள்ள சொல்லி போன் செய்கிறார். ஜீவா போனை எடுக்கவில்லை. பணத்தை காணவில்லை என அழுது கொண்டிருக்கும் முல்லையை குத்தி காட்டுகிறார் மீனா. அப்போது அங்கு வரும் கதிர், முல்லையை சமாதானப்படுத்துகிறார்.
நான் தான் பணத்தை எடுத்தேன் என்று சொல்லி யாராவது சொல்லிடுவாங்களோன்னு பயமா இருக்கு என கதிரிடம் முல்லை கூறுகிறார். ஜீவா போன் எடுக்காததால், மூர்த்திக்கு போன் செய்யும் ஜனார்த்தனன், ஜீவாவை சூப்பர் மார்கெட்டிற்கு அனுப்பி வைக்க சொல்லி கேட்கிறார். ஜீவாவுக்கு போன் செய்து சூப்பர் மார்க்கெட்டுக்கு போக சொல்லி அனுப்பி வைக்கிறார் மூர்த்தி.