சமைக்க சொன்னது ஒரு குத்தமா?? வீட்டையே ரெண்டாக்கிய மீனா! கோவத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

0

முல்லைக்கு உடம்பு சரியில்லை என கூற மீனா சமைக்க கிளம்புகிறார். யாரும் உதவி செய்யத்தேவையில்லை என கூறிவிட்டு சமைத்த மீனாவின் சாப்பாட்டை சாப்பிட முடியாமல் திணறுகிறார்கள் கதிரும், ஜீவாவும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் வீட்டிலிருந்து பணத்தை திருடிவிட்டதை நினைத்து வருத்தப்படுகிறார் கண்ணன். வீட்டில் முல்லையின் கையில் சுளுக்கு விழுந்து விட்டதால் தனம் சுளுக்கு எடுத்து விடுகிறார். சுளுக்கு விழுந்த கையோடு சமைக்க செல்லும் முல்லையை தனமும், லட்சுமியும் தடுக்கிறார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உனக்கு ஒரு வேலையும் செய்யத்தெரியலை, முல்லைக்கு முடியாத நேரத்திலாவது நீ செய்யலாம்ல என லட்சுமி கூற, முடியை மடித்து கொண்டை போட்டுக்கொண்டு இன்னைக்கு நான் தான் சமைக்க போகிறேன் என தடாலடியாக கிளம்புகிறார் மீனா. நானும் அவங்க கூட இருந்து சமையலை பாத்துக்குறேன் என முல்லை கிளம்புகிறார்.

சமையலறைக்கு வரும் மீனா சாம்பார் வைக்க போறேன், கூட்டு நானே பண்ணிடுறேன் என முல்லையிடம் கூறுகிறார். முல்லையிடம் அரிசிக்கு அளவு கேட்கும் மீனா அரிசியோடு தண்ணியையும் சேர்த்து அப்படியே அடுப்பில் வைக்கிறார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

முல்லையிடம் கீரையை கொடுத்து நீங்க உங்க வேலையை பாருங்க என கூறிய மீனா சாம்பாருக்கு கடலை பருப்பை அடுப்பில் வைத்து சமைக்க துவங்குகிறார். குக்கரில் விசில் வந்ததும் திறந்து பார்க்கிறார் பருப்பு வேகவேயில்லை. மதியம் வீட்டிற்கு சாப்பிட வரும் ஜீவா, கதிருக்கு தான் சமைத்த சாப்பாட்டை பரிமாறுகிறார் மீனா.

பரிமாறும்போது நான் சமைச்சதால சோறு எவ்வளோ வெள்ளையா இருக்கு, சாம்பார் எவ்வளோ வாசனை வருது என பெருமையாக கூறுகிறார் மீனா. சாம்பாரில் கடலை பருப்பை போட்டு சமைத்ததற்கு வீட்டில் அனைவரும் கடுப்பாக, நான் சாப்புடுகிறேன் என கதிர் கூறிவிட்டு பருப்பை மெல்ல முடியாமல் திணறுகிறார். பகல் முழுவதும் வேலை பார்த்து விட்டு வீட்டிற்கு சாப்பிட வர்றவங்களுக்கு நல்ல சாப்பாடு கொடுக்க முடியல என லட்சுமி கவலை அடைகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here