’25 வருசமா பாக்கியா கூட பிடிக்காம தான் வாழ்ந்துட்டு இருக்கேன்’ – குடித்து விட்டு மூர்த்தியிடம் உளறும் கோபி!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கிய லட்சுமி மகா சங்கமம் தொடரில் தற்போது கோபி தொடர்ந்து மூர்த்தியிடம் சிக்கி வருகிறார். மேலும் இன்றைய எபிசோடில் ராதிகா ஜனார்தனனுக்கு தனது நிலத்தை விற்கப் போகிறார்.

மகா சங்கமம்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்கு விருந்தாளியாக வரும் பாக்கியா அவர்களுடன் நன்கு பழகுகிறார். ஆனால் கோபிக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை. தொடர்ந்து இனியாவுக்கும் மூர்த்தி குடும்பத்தை பிடித்து விடுகிறது. அதுவும் கண்ணனுடன் நன்கு பழகி வருகிறார். நேற்றைய எபிசோடில் கூட கண்ணனுடன் இனியா சகஜமாக பேசிக்கொண்டிருக்க அதனை பார்த்த கோபி கோபமடைந்து இனியாவை உள்ளே போக சொல்கிறார்.

‘கோவை மெட்ரோ முதல் துறை மேம்பாடுகள் நிதி ஒதுக்கீடு வரை’ – இடைக்கால பட்ஜெட் முழு விபரம்!!

இன்றைய எபிசோடில் கோபி மூர்த்தி அனைவரும் பேசிக்கொண்டுள்ளனர். அப்பொழுது கோபியிடம் உங்க ஆபீஸில் இருந்து யார் யார் வந்திருக்காங்க என்று கேட்க எதுக்கு கேக்குறீங்க என்று பதட்டமடைகிறார். யாராவது பொண்ணு வந்து இருக்காங்களா?? என்று கேட்க அப்படி எல்லாம் யாரும் வரலை என்று எடுத்தெறிந்து பேசுகிறார். அதன் பின் கோபியை இங்கேயே தங்க சொல்ல அதெல்லாம் தன்னால் முடியாது என்று சொல்கிறார்.

பாக்கியா ஆசைப்படுவதாக சொல்ல இத்தனை நாளா அவ மூஞ்சியாவே பார்த்துகிட்டு இருந்தது பத்தாதா?? என்று கோவமடைகிறார். 25 வருஷம் கல்யாணம் ஆகிடுச்சுனு வாழ்ந்துட்டு இருக்கேன். எப்போ பாரு அரட்டை, சமையல் இது தான் வாழ்க்கையா?? என்று சலித்து கொண்டு செல்கிறார். இதனை கேட்ட மூர்த்திக்கு எதோ தவறாகப்படுவதாக தெரிகிறது.

அடுத்ததாக கோபி தான் கிளம்புவதாக சொல்கிறார். அதன் பின் பாக்கியா கோபியை தனியாக அழைத்து ராதிகாவை வீட்டிற்கு அழைக்கலாமா என்று சொல்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் கோபி பாக்கியாவை கண்டபடி திட்டி விட்டு செல்கிறார். அதன் பின் ராதிகாவுடன் தங்கும் கோபி நாளைக்கு வேலை முடிந்ததும் காரைக்குடி செல்லலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதுவரை வேலை என்பதால் தனியாக எதுவும் பேச முடியவில்லை என்று சொல்கிறார். ராதிகா கொஞ்சம் யோசிக்கிறார். ஆனாலும் கோபியின் வற்புறுத்ததால் ஒத்துக்கொள்கிறார். அதன் பின் எழில் மற்றும் கோபியின் அப்பா வருகின்றனர். முல்லையின் அப்பாவும், கோபியின் அப்பாவும் நேருக்கு நேர் சந்திக்கின்றனர். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் ஷாக் ஆகின்றனர்.

அடுத்ததாக வீட்டை முழுக்க அலங்கரிக்கின்றனர். சமையல் வேலையையும் மும்முரமாக செய்து கொண்டுள்ளனர். இந்த பக்கம் ஜனார்த்தனன் குடவுன் இடத்தை பதிவு செய்வதற்காக காத்துக்கொண்டுள்ளார். ராதிகாவும் கோபியும் கிளம்பி செல்கின்றனர். வீட்டில் உள்ள அனைவரும் ராதிகாவிற்காக காத்துக்கொண்டுள்ளனர். ஆனால் ராதிகாவோ, ஜனார்தனனுக்கு அந்த இடத்தை கொடுக்க ரெஜிஸ்ட்ரேசன் ஆபீஸுக்கு கிளம்புகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here