‘நான் முதல்ல குழந்தை பெத்துட்டேன்னு பொறாமை’ – தனத்தின் மீது பழி போடும் மீனா!! கொதித்தெழுந்த ரசிகர்கள்!!

0
pandian stores

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் தற்போது மீனாவால் பல பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் தனத்தையும் திட்டி தீர்த்து வருகிறார் மீனா. இன்றைய எபிசோடில் கூட தான் முதலில் குழந்தை பெற்று கொண்டதை நினைத்து தனம் பொறாமைபடுவதாக நினைக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

முந்தைய எபிசோடில் குழந்தையை கவனிக்க முடியாமல் தவிக்கும் மீனா வீட்டில் யாரும் இல்லாததை பார்த்து கோவமடைகிறார். இதில் ஜீவாவின் அம்மா வேறு குழந்தையை பாண்டியம்மா என்று அழைத்ததால் மிகவும் கோவமடைகிறார். தனம் தான் கர்ப்பமாக இருக்கிறோமோ என்ற பயத்திலேயே டெஸ்ட் கார்டு வாங்க செல்கிறார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இயல்பு நிலையிலேயே தனத்தை அனைவரும் கவனித்துக்கொண்டு தான் உள்ளனர். ஆனாலும் மீனா தனம் வேண்டும் என்றே செய்வது போல நினைத்து கொள்கிறார். அதன் பிறகு ஜீவாவிடமும், முல்லையிடமும் தனத்தை பற்றி தவறாக கூற அவர்கள் தனத்திற்கு சப்போர்ட் செய்து பேசியதால் கோபமடைந்து செல்கிறார் மீனா.

இன்றைய எபிசோடில் தூங்க செல்லும் மீனா தனம் இன்னும் குழந்தையை கவனிக்க வராததை பார்த்து ஜீவாவிடம் மறுபடியும் குறை கூறுகிறார். ஆனால் ஜீவா இதனை கண்டுகொள்வதாக இல்லை. அடுத்ததாக குழந்தை தூங்கியதும் இருவரும் படுக்க குழந்தை மறுபடியும் அழுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சரி என்று திரும்பவும் குழந்தையை சமாதானம் படுத்த மறுபடியும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. இரவு முழுவதும் மாறிமாறி முழித்து இருந்து குழந்தையை தூங்க வைக்க மீனாவும் ஜீவாவும் சோர்வடைகின்றனர். அதன் பிறகு குளிக்க செல்லும் மீனா சத்தியமூர்த்தி குளித்துக் கொண்டிருப்பதை பார்த்து முல்லையிடம் பேசிகொண்டுள்ளார்.

பாத்ரூம் விஷயத்தை பற்றி மறுபடியும் பேச ஆரம்பிக்கின்றனர். அதன் பிறகு ஹாலில் தனம் கதிர் மற்றும் அவரின் அம்மா பேசிகொண்டுள்ளனர். அப்பொழுது கதிர் தனத்திடம் ஏன் சோர்வாக இருக்கீங்க?? என்று கேட்க மறுபடியும் தனத்திற்கு வாந்தி வருகிறது.

இதனால் கதிர் ஹாஸ்பிடலுக்கு போகலாம் என்று அழைக்கிறார். ஆனால் வழக்கம் போல சமாளித்து விட்டு உள்ளே செல்கிறார் தனம். அப்பொழுது அடுத்ததாக குழந்தையை வைத்து மீனா, முல்லை மற்றும் ஜீவாவின் அம்மா குழந்தையை கொஞ்சிக்கொண்டுள்ளனர்.

அப்பொழுது மீனா முல்லையிடம் இப்போ கூட தனம் வரலை பாருங்க என்று சொல்ல முல்லையும் கடுப்பாகிறார். தனம் வாந்தியெடுத்ததையும் சொல்ல மீனா நம்பவும் இல்லை. நான் முதலில் குழந்தை பெற்றதால் அவங்களுக்கு பொறாமை என்று மனதில் நினைத்து கொள்கிறார். அந்த சமயம் குழந்தையை பாண்டியம்மாள் என்று ஜீவாவின் அம்மா கொஞ்ச அங்கிருந்து குழந்தையை வாங்கி கொண்டு கோவமாக செல்கிறார் மீனா. இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here