கர்ப்பமா இருக்குறோமா?? பயத்தில் டெஸ்ட் எடுக்க செல்லும் தனம் – விறுவிறுப்பான கதைக்களத்துடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குழந்தையுடன் ஜீவாவின் வீட்டிற்கு வந்த மீனா இங்கேயே தங்கிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. மேலும் குழந்தை இரவு முழுக்க அழுதுகொண்டு வேறு உள்ளது. அடிக்கடி தனம் வேறு தலைசுற்றல் வாந்தி என இருக்கிறார். இதை வைத்து பார்க்கும்போது பல ட்விஸ்டுகள் இந்த வார எபிசோடுகளில் காத்துக்கொண்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சுட்டி குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா கோலாகலமாக நடந்ததை அடுத்து மீனா ஜீவாவின் வீட்டிற்கு வருகிறார். ஜனார்த்தனன் மீனாவை அழைத்துக்கொண்டு போக முயற்சிக்க திடீரென மீனாவின் அம்மா கீழே விழுந்து அடிபட்டதால் மீனா அங்கே செல்ல முடியாமல் போகிறது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் இரவு முழுவதும் குழந்தை தூங்காமல் அழுதுகொண்டிருக்க தனம் மடியில் குழந்தையை படுக்க வைத்து இரவு முழுவதும் பார்த்துக்கொள்கிறார். இதனால் மீனாவிற்கு ஆத்திரமும் வருகிறது. காலையில் எழுந்ததும் வழக்கம் போல சண்டையை ஆரம்பிக்கிறார்.

கண்டிப்பாக பாத்ரூம் கட்டித்தர வேண்டும் என்று வாக்குவாதம் செய்கிறார் மீனா. அதன் பின் ஜனார்த்தனன் குழந்தையை பார்க்க மீனாவின் வீட்டிற்கு வருகிறார். குழந்தைக்கு சுற்றிப்போடும் படியும் கூறுகிறார். அதன் பின் சமையல் வேலையை ஆரம்பிக்க செல்லும் தனம் முல்லையுடன் பேசிக்கொண்டுள்ளார்.

முல்லை சட்டியில் உணவுக்கு தாளிக்க அதனால் தனத்திற்கு வாந்தி வருகிறது. இதனால் முல்லை தனத்தை ஒய்வு எடுக்க சொல்கிறார். அவரும் அங்கிருந்து செல்ல ஹாலில் படுத்தவாறே தூங்குகிறார். அப்பொழுது ஜீவாவின் அம்மா வந்து பேச தனம் அசந்து தூங்குகிறார். ரூமில் படுத்து தூங்க சொல்ல சரி என்று செல்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்பொழுது ஐஸ்வர்யா அங்கு வர ஜீவாவின் அம்மாவுடன் பேசிக்கொண்டுள்ளார். அப்பொழுது திரும்பவும் அங்கு வரும் தனம் வேறு ஒருவருக்கு கேட்பது போல நாள் தள்ளி போனால் என்ன அர்த்தம் என்று கேட்க கர்ப்பமாக இருப்பார் என்று கூறுகிறார். இதனால் தனத்திற்கு அதிர்ச்சியாகிறது.

இது வேற எதாவது இருக்கும் என்று கூற ஜீவாவின் அம்மா கண்டிப்பாக கர்ப்பம் தான் என்று அடித்து கூறுகிறார். இதனால் தனத்திற்கு பதட்டமாகிறது. இதனால் ஐஸ்வர்யாவிடம் மெடிக்கல்க்கு போக வேண்டும் என்று கூறுகிறார். ஐஸ்வர்யா புரியாமல் காய்ச்சல் மாத்திரை என்னிடம் இருக்கு என்று கூற இது வேற மாத்திரை கடையில் தான் கிடைக்கும் என்று கூறி வேகமாக மெடிக்கல் ஷாப் செல்கிறார்.

அப்பொழுது மறுபடியும் குழந்தை அழுக ஆரம்பிக்கிறது. மீனாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. முல்லையும் எவ்வளவோ சமாதானம் செய்கிறார். ஆனால் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. மேலும் மீனா வேறு தனக்கு பசிக்கிறது என்று சொல்ல முல்லை அவருக்கு சாப்பாடு எடுத்து வர செல்கிறார். அப்பொழுது ஜீவாவின் அம்மா வேறு குழந்தை ஏன் அழுகிறது என்று கேட்க மீனா கோவமடைகிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here