விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ்ம் ஒன்று. நேற்றைய எபிசோடில் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. மேலும் இன்று மீனா ஜீவாவின் வீட்டிற்கு வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா சொந்தங்கள் கூடி கோலாகலமாக நடைபெற்றது. மேலும் பெயர் வைப்பதற்கு பல பிரச்சனைகளும் ஏற்பட்டது. எப்படியோ கடைசியாக பெயரை குலுக்கி போட்டு அதில் கயல்விழி என பெயர் வரவே அனைவரும் சந்தோஷமடைந்து குழந்தைக்கு பெயர் சூட்டினர்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
ஆனால் ஜீவாவின் அம்மா தனது கணவரின் பாண்டியம்மா என்ற பெயரை வைக்க வேண்டும் என்று அடம்பிடிக்க அடுத்ததாக எப்படியோ சமாதானம் செய்து குழந்தைக்கு பெயர் சூட்டு விழா இனிதாக முடிந்தது. மீனாவை இன்று வீட்டிற்கு அழைத்து வருகிறார் ஜீவா.
மேலும் வெளியே சென்று வரும் ஐஸ்வர்யாவும், கண்ணனும் அமர்ந்து பேச ஆரம்பிக்க கண்ணன் ஐஸ்வர்யா பெயரை வைத்து கலாய்க்கிறார். மேலும் குழந்தையின் பெயர் சூட்டு விழாவிற்கு வந்திருக்கலாம் என்று கேட்க அம்மாவின் பணத்தை எடுக்க பேங்க் சென்றதாக கூறுகிறார் ஐஸ்வர்யா.
கண்ணன் பணத்தை எடுக்க எவ்வளவு அவசரமா போயிருக்க. சரியான ஆளு தான் நீ என்று வார்த்தையை விடுகிறார். இதனால் ஐஸ்வர்யா கோவமடைகிறார். குழந்தையை ஜீவாவின் குடும்பத்தினர் கொஞ்சிக் கொண்டுள்ளனர். அப்பொழுது ஜீவாவின் அம்மா குழந்தையை பாண்டியம்மா என்று கூப்பிட மீனா கோவித்துக்கொண்டு செல்கிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஜீவா வந்து சமாதானம் செய்ய இனிமேல் பாண்டியம்மா என்று அவர்கள் கூப்பிட்டால் இந்த வீட்டிற்கு மொத்தமாக வர மாட்டேன் என்று கூறி மிரட்டுகிறார். அதற்கிடையில் கண்ணன் நடந்தவற்றிற்கு ஐஸ்வர்யாவிடம் மன்னிப்பும் கேட்கிறார். ஆனால் ஐஸ்வர்யா கோவம் அடங்கவில்லை. கண்ணனிடம் பேசாமலே செல்கிறார்.
அடுத்ததாக ஜனார்த்தனன் விழாவை பற்றி மனைவியிடம் பேசிகொண்டுள்ளார். அப்பொழுது மீனா எப்பொழுது வருவார் என்று கேட்க ஜனார்ததான் அவளை அழைத்து வர நானே செல்கிறேன். இப்போதைக்கு அவங்க மீனாவை விட மாட்டார்கள் என்று கூறுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.