விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒன்று. இந்த சீரியலை கதிர் முல்லைக்காகவே பார்ப்பவர்களும் உண்டு. இந்நிலையில் கதிருக்கும், முல்லைக்கும் எப்பொழுது ரொமான்ஸ் வரும் என்றும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். இப்பொழுது இதுவரை சண்டைகள் இல்லாமல் போய்க்கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் தற்போது கருத்து வேறுபாடு ஏற்படும் நிலையில் உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸும் ஒன்று. கூட்டு குடும்ப கதை என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தற்போது சோக கதைகளுடன் ஒளிபரப்பாகி நிலையில் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்தது என்று இருந்த குடும்பத்திற்கு மறுபடியும் பிரச்சனை ஏற்படுத்தும் விதமாக கதிர் தன் நண்பனின் மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தனது நண்பனின் தங்கை என்று கூறி அறிமுகப்படுத்தியுள்ளார். இதனை ஆரம்பத்தில் முல்லை சாதாரணமாக எடுத்து கொண்டாலும் ரதி பேசியதை வைத்து அனைவர்க்கும் சந்தேகம் எழுகிறது. இன்றைய எபிசோடில் கண்ணாவும், ரதியும் கார்ட்ஸ் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது முல்லை ரதியிடம் பேச்சு கொடுக்க குடும்பத்தை பற்றி விசாரிக்கிறார்.
செந்திலை பற்றி அனைத்தும் முல்லைக்கு ஏற்கனவே தெரிந்திருப்பதால் ரதியிடம் குடும்பத்தை பற்றி விசாரிக்க ரதி உளறிக் கொட்டுகிறார். இதனால் கண்ணாவிற்கும் முல்லைக்கும் மேலும் சந்தேகம் எழுகிறது. கதிரின் அம்மா ரதியிடம் ஏதோ தவறு இருக்கிறது என்று கூறுகிறார். ஆனாலும் முல்லை கதிரின் மீது தனக்கு நம்பிக்கை உள்ளது. இன்னும் 2 நாட்கள் தானே என்று சமாதானம் கூறுகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனாலும் முல்லைக்கு ரதியின் மீது சந்தேகம் வருகிறது. மேலும் கதிர் தன்னிடம் பொய் சொல்கிறாரோ என்று தோன்றுகிறது. மகேஷ் இல்லாமல் இருக்க முடியவில்லை என்று கூறும், ரதிக்கு ஆறுதல் சொல்லி விட்டு அங்கிருந்து செல்லும் கதிர் மூர்த்தியிடம் பேசிக்கொண்டுள்ளார்.
அப்பொழுது கதிரின் அம்மா நீ செய்வது எதுவும் சரியாக இல்லை அந்த ரதியிடம் உனக்கு என்ன பேச்சு. முல்லை சந்தேகப்படாத வரைக்கும் ஒன்றும் இல்லை. பெரிய பிரச்சனை வராமல் பார்த்துக்கொள் என்று திட்டுகிறார். மைனா முல்லைக்கு சென்னையில் எடுத்த புகைப்படங்களை அனுப்ப அதை பார்த்து ரசித்து கொண்டுள்ளார். அப்பொழுது முல்லை மைனாவிற்கு போன் செய்து விசாரிக்க செந்திலுக்கு தங்கச்சியே கிடையாது என்று கூறுகிறார். இதனால் முல்லையும் அதிர்ச்சியடைகிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.