விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து வரும் எபிசோடுகள் பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்து வருகிறது. கண்ணன் ஐஸ்வர்யா வீட்டின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்துகொண்டதால் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனால் கண்ணன் ஐஸ்வர்யாவை வீட்டிலேயே சேர்க்கவில்லை. இருவரும் வீடு கிடைக்காமல் அலைந்து போது அண்ணனுக்கு தெரிந்தவர்கள் மூலம் வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
வீட்டில் ஒவ்வொருவரும் கண்ணனுக்கு உதவி செய்து வருகின்றனர். ஆனால் கண்ணன் மேல் அனைவர்க்கும் கோவம் இருந்து தான் வருகின்றது. ஆனால் இதில் அதிகம் பாதிப்படைந்தது கண்ணனின் அம்மா லட்சுமி தான். கண்ணன் செய்த காரியத்தை நினைத்தே அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. கண்ணன் என்று புலம்பி கொண்டே இருந்தார். இந்நிலையில் லட்சுமி கண்முழிக்காமல் இருக்க வீடே கலவரமானது. லட்சுமி உயிர் பிழைப்பாரா?? மாட்டாரா?? என்ற கவலை அனைவருக்குமே இருந்தது.
இந்நிலையில் அது பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது லட்சுமி லோ பிரஷரால் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாதாம், கண்ணன் அம்மாவை பார்க்க மருத்துவமனைக்கு ஓடி வருகிறார். இதனால் கோவமடையும் மூர்த்தி அவர் லக்ஷ்மியை பார்க்க விடாமல் தடுக்கிறார். இதுதான் வரும் எபிசோடுகளில் நடக்க போகின்ற காட்சிகளாம்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்