‘இப்படி எங்கள எல்லாம் விட்டுட்டு போயிட்டியே முல்லை’ – ஷூட்டிங்கில் கதறும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம்!!

0

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து இன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் நடந்துள்ளது. இதனால் சக நடிகர்கள் அனைவரும் சித்ராவிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு ஷூட்டிங்கை தொடர்ந்துள்ளனர். மேலும் முல்லை இல்லாத அந்த வீட்டில் அவரை நினைத்து கதறி அழுதுள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சித்ரா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சித்ரா. நடிப்பில் மட்டுமல்ல பாடுவதிலும் வல்லவர் தான் சித்ரா. இப்படி பன்முக திறமைகளை கொண்ட சித்ராவிற்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம் என்றே சொல்லலாம்.

இவரின் இந்த தற்கொலை தமிழகத்தையே உலுக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இவரின் தற்கொலைக்கான காரணத்தையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவரது கணவரும், தாயாரும் கொடுத்து வந்த டார்ச்சர் தான் காரணம் என கூறி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் விசாரணை முடிந்த பிறகு தான் முழு விபரங்களும் தெரியவரும். மேலும் இன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங் தொடங்குகிறது. முல்லை இல்லாத இந்த ஷூட்டிங்கால் சக நடிகர்களும் கண்கலங்கியுள்ளனர். முல்லையின் புகைப்படத்தை வைத்து அவருக்கு கண்ணீர் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.

‘பாரதி கண்ணம்மா’ ஸ்பெஷல் எபிசோடாக 3 மணிநேர தொடர்!!

கண்ணீர் அஞ்சலி செலுத்தும் போதே சித்ராவை நினைத்து பலரும் கதறி அழுதுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இத்தனை நாட்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் சித்ரா மற்றும் சக நடிகர்கள் டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்டு தான் பார்த்துள்ளோம். இன்றைய சம்பவம் பலரையும் பாதித்துள்ளது. ரசிகர்களும் முல்லை இல்லாத சீரியலை எப்படி பார்க்க போகிறோம் என்று கண்ணீர் வடித்தும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here