பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்பொழுது யாருமே எதிர்பாராத விதமாக பல ட்விஸ்ட்டுகள் நடைபெற்று வருகிறது. அதாவது, ஜனார்தனனை ஏமாற்றிக் கொண்டிருக்கும் பிரஷாந்த் ஒரு கட்டத்தில் மாட்டிக்கொள்கிறார். இதனால் பிரச்சனை ஏற்பட ஜனார்தனனுக்கும் பிரஷாந்த்துக்கும் கைகலப்பு ஆகிறது. பிரஷாந்த் ஜனார்தனனை தள்ளி விட இதனால் அவர் இறந்து போகிறார்.
Enewz Tamil WhatsApp Channel
பிரஷாந்த் மொத்த பழியையும் ஜீவா கதிர் மீது போட்டு விடுகிறார். இதனால் ஜீவாவையும் கதிரையும் போலீஸ் கைது செய்கின்றனர். இந்த பழியில் இருந்து எப்படி ஜீவா, கதிர் தப்பிக்க போகிறார் என்று தான் தெரியவில்லை. இப்படி இருக்க ஜனார்த்தனன் உயிரோடு மீண்டு வந்து வாக்குமூலம் கொடுத்தால் மட்டுமே ஜீவா, கதிர் தப்பிக்க முடியும். அதுமட்டுமின்றி வேறு யாராவது இந்த கொலையை பார்த்திருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே சீரியலை எப்படி கொண்டு போக போகிறார்கள் என்பது தான் தெரியவில்லை.