மீனாவை ஆண்டி என சொல்லி கலாய்க்கும் ஐஸ்வர்யா.., கஸ்தூரி செய்த கேவலமான வேலை.., சூடுபிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!!

0
மீனாவை ஆண்டி என சொல்லி கலாய்க்கும் ஐஸ்வர்யா.., கஸ்தூரி செய்த கேவலமான வேலை.., சூடுபிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!!
மீனாவை ஆண்டி என சொல்லி கலாய்க்கும் ஐஸ்வர்யா.., கஸ்தூரி செய்த கேவலமான வேலை.., சூடுபிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கான இன்றைய எபிசோட்டில் ஐஸ்வர்யா கண்ணன் செய்யும் செயலை பார்த்து முல்லை சத்தம் போடுகிறார். இன்னொரு பக்கம் ஜீவா, மீனா செலவு கணக்குகளை பார்த்து கொண்டிருக்க அப்போது மீனாவின் அம்மா ஐஸ்வர்யா ஹாஸ்பிட்டலில் இருக்கும் விஷயத்தை சொல்கிறார். இதை அறிந்த மீனாவும், ஜீவாவும் ஐஸ்வர்யாவை பார்க்க ஹாஸ்பிட்டலுக்கு செல்கின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனால் இந்த விஷயம் ஜனார்தனனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மேலும் ஜீவாவிடம் ஜனார்த்தனன் ஐஸ்வர்யாவுக்கு தான் ஒன்னும் இல்லையே அப்புறம் எதுக்கு அங்க போனும் என சொல்ல இருவரும் அவர் பேச்சை கேட்காமல் செல்கின்றனர். பின் அங்கு வரும் மீனா, ஜீவா ஐஸ்வர்யாவை பற்றி நலம் விசாரிக்கின்றனர். பின் ஐஸ்வர்யா போடும் வீடியோவை மீனா கிண்டலடிக்க அவரை ஆண்டி என ஐஷு கலாய்க்கிறார். பின் இருவரும் அங்கிருந்து கிளம்பி விடுகின்றனர்.

பின் ஐஸ்வர்யாவின் சித்தி கஸ்தூரி அங்கு வர எல்லோரும் பேசிக் கொண்டிருக்க, டாக்டர் ஒருத்தர் தான் இருக்க வேண்டும் என சொல்ல கஸ்தூரி ஐஸ்வர்யாவுடன் இருக்கிறார். பின் எல்லோரும் கிளம்ப ஐஸ்வர்யாவிடம் கஸ்தூரி தனம், முல்லையை பற்றி ஏத்தி விடுகிறார். ஐஸ்வர்யாவும் கோபத்தோடு யோசிக்க இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here