பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி கோபிக்காக பாக்கியாவிடம் காபி போட்டு கொடுக்க சொல்கிறார். ஆனா பாக்கியா என்னால் செய்ய முடியாது என சொல்ல, ஈஸ்வரி ஆத்திரமடைகிறார். பின் அவரே தன் மகனுக்காக காபி போட்டு இனியாவை கொடுக்க சொல்கிறார். இனியா காபியை கொண்டு போக அங்கு ராதிகா, கோபி பேசிக் கொண்டிருக்கின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
உடனே ராதிகா காபியா என கேட்க உங்களுக்கு இல்ல என் அப்பாவுக்கு என சொல்கிறார். அப்போது கோபி இனியாவிடம் பேச முயற்சி செய்கிறார். ஆனால் வேலை இருக்கிறது என்று இனியா கிளம்பி விடுகிறார். அந்த காபியை கோபி குடிக்க போகும்போது ராதிகா தட்டி விடுகிறார். இங்க நானும் இருக்கேன் ஆனா உங்களுக்கு மட்டும் காபியா என சண்டை போடுகிறார்.
பின் ராதிகா நா காபி போட்டுட்டு வரேன் என்று சொல்லி கிச்சனுக்கு சென்று பால் பாத்திரம் எங்கே இருக்கு என்று கேட்க யாருமே பதில் சொல்லாமல் இருக்க செல்வியை அதட்டி பேசுகிறார். பின் ராதிகாவை ஈஸ்வரி திட்ட அவர் எதையும் கண்டு கொள்ளாமல் காபி போட்டு செல்கிறார். ஆனால் அந்த காபியை கோபி குடிக்க முடியாமல் கீழே ஊற்றி விடுகிறார். இதுக்கு ராதிகா சண்டை போட, நான் இந்த கல்யாணமே பண்ணி இருக்க கூடாது என்று புலம்பிக் கொண்டு இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.