விஜய் டிவியில் பிரபலமான ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து வருகிறது. அதாவது இத்தனை நாட்கள் ஒற்றுமையாக இருந்த குடும்பம் இப்பொழுது பிரிந்து வாழ்ந்து வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் இத்தனை வருடம் வாழ்ந்த வீட்டை விற்கும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. அதிலும் ஜனார்த்தனன் சாமர்த்தியமாக காய் நகர்த்தி மீனா பெயரில் வீட்டை எழுதி வாங்கி விட்டார். இதனால் வீட்டில் மேலும் சலசலப்பு ஏற்பட்டு விட்டது. இப்படி இருக்க இப்பொழுது இந்த சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்து வருகிறது.
ஐயோ.., நீச்சல் குளத்துக்கு பக்கத்துல இப்படி இருக்கீங்களே அனிகா.., லைக்ஸ்களை தெறிக்கவிடும் இளசுகள்!!
இந்நிலையில் இந்த சீரியல் ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஜீவாவிற்கு கவிதா கௌடா ஜோடியாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் அவை.
மேலும் சித்ராவும் இதில் இடம் பெற்றுள்ளார். ஒருவேளை முல்லை கதாபாத்திரத்தில் கவிதா கௌடா நடிக்க கூட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.