பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது முல்லை கதாபாத்திரத்தில் நடித்த காவியா விலகியுள்ள நிலையில் அவர் கடைசியாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் கண்கலங்கியுள்ளனர். முல்லை கதாபாத்திரத்தில் சித்ராவிற்கு பிறகு யார் நடிக்க போகிறாரகள் என்ற எதிரிபார்ப்பு அனைவருக்குமே இருந்தது.
மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை தூக்கி நிறுத்தியதே இந்த முல்லை கதாபாத்திரம் தான். அதனால் தான் பலரும் நடிக்க தயங்கினர். ஆனால் காவியா தான் கெத்தாக இதில் நடிக்க முன் வந்தார். ஆரம்பத்தில் அவருக்கு நெகடிவ் கமெண்ட்ஸ் வர தான் செய்தது. ஆனால் அதனை காவியா கண்டு கொள்ளவே இல்லை. இப்படி இருக்க இவரும் சில காரணங்களால் சீரியலை விட்டு விலக போவதாக கூறியிருந்தார்.
இப்படி இருக்க இப்பொழுது கடைசியாக முல்லை கதாபாத்திரத்தில் நடித்த காஸ்டியூமை வெளியிட்டு இதுதான் கடையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டில் இருப்பது என்று குறிப்பிட்டுள்ளார். இது பலரையும் வேதனையாக்கியுள்ளது. மேலும் இந்த வாரத்திற்குள் புது முல்லை என்ட்ரி கொடுப்பார். யார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
View this post on Instagram