சத்தியமூர்த்தி பற்றிய உண்மையை போட்டுடைத்த தனத்தின் அம்மா – விறுவிறுப்பான கதைக்களத்துடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!!

0

தற்போது விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸும் ஒன்று. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் சீரியல் என்றே சொல்லலாம். இது வரையிலும் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் போய்க்கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சில சீரியஸ் ஆன காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதற்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா, பிக் பாஸ் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என பல நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டுள்ளது. இதனால் விஜய் டிவியின் டிஆர்பியும் அதிகரித்துள்ளது. தற்போது மக்கள் விரும்பி பார்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸிலும் அதிரடியான திருப்பங்கள் வரவுள்ளது.

pandian stores
pandian stores

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மூத்த அண்ணனாக இருக்கும் சத்திய மூர்த்தி, தனத்திற்கும் திருமணம் ஆகி இதுவரையிலும் குழந்தை இல்லாமல் இருக்கிறது. பலரும் தனத்தை குழந்தை இல்லை என ஏளனமாக பேசி வருகின்றனர். கல்யாணம் ஆன புதிதில் தனது தம்பிகளுக்காக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்யும் சத்தியமூர்த்தி, தனத்திடமும் கூறி சத்தியம் வாங்குகிறார்.

pandian stores
pandian stores

இதனால் 15 வருடங்களாக அவர்களுக்கு குழந்தையும் இல்லை. இந்த உண்மை அந்த வீட்டில் முல்லைக்கும் கதிருக்கும் மட்டுமே தெரிகிறது. இதனால் தனது அண்ணன் அண்ணிக்காக சென்னை வரை மருத்துவரை விசாரிக்க சென்ற காட்சிகளும் ஒளிபரப்பானது. இந்நிலையில் ஏற்கனவே மீனாவிற்கு குழந்தைக்கு பிறந்ததால் அனைவரும் தனத்தை இழிவாக பேசி வருகின்றனர்.

pandian stores
pandian stores

இது வரையிலும் யாருக்கும் தெரியாத உண்மைகள் தற்போது வெளியாகியுள்ளது. குடும்பத்துடன் கோவிலுக்கு செல்கிறார் சத்தியமூர்த்தி. அப்பொழுது குடும்பத்துடன் அமர்ந்திருக்கும் போது தனத்தின் அம்மா இவர்களுக்கு ஏன் குழந்தை இல்லை என்ற உண்மையை போட்டு உடைக்கிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். இந்த ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

pandian stores
pandian stores

இந்த ப்ரோமோவை வைத்து பார்க்கும்போது அனைவரும் கட்டாயப்படுத்துவதன் காரணமாக தனம் குழந்தை பெற்றுக் கொள்ள ஒத்துக் கொள்வார் என்று தெரிகிறது. ஏற்கனவே ஒரு எபிசோடில் ஒரு பூஜையில் தனத்திற்கு குழந்தை பிறக்கும் என ஸ்வாமி அருள் வாக்கு கூறியிருப்பார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது அடுத்து வரும் எபிசோடுகளில் தனம் குழந்தை பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here