பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவின் அத்தையை மீனாவை அந்த குடும்பத்தில் இருந்து பிறக்க ஜனார்த்தனன் அனுப்பி வைக்கிறார். மேலும் மீனாவிடம் தனத்தை பற்றி தவறாக சொல்லி மனதை மாற்ற நினைக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கர்பமானத்தில் இருந்து வீட்டில் மகிழ்ச்சியாகவே இருந்தனர். ஆனாலும் மீனா திருத்துவார் என்று பார்த்தால் இதுவரையிலும் திருந்திய பாடில்லை. மேலும் எடுத்ததற்கெல்லாம் எதாவது குறை சொல்லிக்கொண்டே இருப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
போதாத குறைக்கு மீனா அப்பா ஜனார்த்தனன் தனது தங்கையை வீட்டிற்கு அனுப்பி குடும்பத்தை பிரிக்க திட்டமிடுகிறார். மீனாவின் அத்தை தனத்தை பற்றி ஒன்றுக்கு இரண்டாக சொல்லி கொடுத்து பகைமையை வளர்க்க பார்க்கிறார். நேற்றைய எபிசோடில் மீனாவின் அத்தை சண்டை போட்டு தனியாக சமைக்க ஆரம்பித்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் ஜனார்தனனிடம் இரண்டுக்கு சொல்லி கொடுக்கிறார். அடித்து ஜீவா வர வீட்டுக்கு பின்னால் இருக்கும் அடுப்பை பார்த்து கண்ணனிடம் என்ன என்று கேட்க நடந்தவற்றை சொல்லுகிறார்.
நேராக மீனாவிடம் செல்லும் ஜீவா மீனாவின் அத்தை செய்தவற்றை கேட்டு சண்டையிடுகிறார். ஆனால் மீனா அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. ஆத்திரம் அடைந்த ஜீவா அந்த அடுப்பை உடைக்கிறார். மீனாவின் அத்தையிடம் இந்த வீடு இப்படி தான் இருக்கும் யாராலயும் மாத்த முடியாது என்று சொல்லி விட்டு செல்கிறார்.
ஆஸ்கார் விருதிற்கான பரிந்துரையில் ‘சூரரைப் போற்று’ – இன்று திரையிடல்!!
அதற்கு மீனாவின் அத்தையும் பிரித்து காட்டுகிறேன் என்று சவால் விடுகிறார். அடுத்து வழக்கம் போல அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அதன் பிறகு குழந்தைக்கு அன்றைக்கு நடந்த பிரச்சனையில் காசை வீட்டில் உள்ளவர்களிடம் பிரித்து கொடுக்கலாம் என்று மூர்த்தியும் மீனாவின் முடிவு செய்கின்றனர்.
அடுத்து மீனாவின் அத்தை பேச்சை கேட்டு ஜனார்த்தனன் வீட்டிற்கு கேஸ் மற்றும் ஸ்டவை வாங்கி வருகிறார். இதனால் மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகிறது. இதோடு எபிசோடும் முடிவடைகிறது.