விஜய் டிவியின் பிரபலமான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் குமரன் நடித்துவருகிறார். தற்போது இந்த தொடரில் இவருக்கு பதிலாக நடிகர் அஸ்வின் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கதிர் வேடம் மாற்றம்
பிரபல தொலைக்காட்சி தொடரான ”பாண்டியன் ஸ்டோர்ஸ்” நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் எப்போதும் பெரிய வரவேற்பு இருக்கும். மற்ற தொலைக்காட்சி தொடர்களை போல் அல்லாது, கூட்டு குடும்பமாக இவர்கள் வாழ்ந்து வரும் தொடரில் வழக்கம் போல மாமியார் வில்லியாக இல்லாமல், ஒரு சராசரி குடும்பத்தில் உருவாகும் பிரச்சனைகளுடன், இந்த தொடர் நகர்ந்து வருகிறது. இத்தொடரில் மூர்த்தி-தனம், ஜீவா- மீனா, கதிர்-முல்லை என மூன்று ஜோடிகள் இருந்தாலும், கதிர் – முல்லை ஜோடிக்கு இளம் ரசிகர்கள் மத்தியில் பெரிய ரசிகர்கள் கூட்டமே உண்டு.
‘சசிகலா அதிமுக கொடியை அகற்றாவிட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ – காவல்துறை எச்சரிக்கை!!
இத்தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சின்னத்திரை நடிகை சித்ரா சில மாதங்களுக்கு முன்பாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து முல்லை கதாபாத்திரத்தில் ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் நடித்து வந்த நடிகை காவ்யா நடித்து வருகிறார். தற்போது ஒளிபரப்பாகிகொண்டிருக்கும் இந்த தொடரில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் குமரன் நடித்து வருகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கடந்த ஒரு வாரமாக வெளியான ”பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரில் நடிகர் குமரன் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் கதிர் எங்கே என்று கேட்டு வந்தனர். நடிகர் குமரன் வேறு ஒரு படப்பிடிப்பில் கலந்துகொள்வதால் அவரால் பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்புக்கு வர முடியவில்லை என அந்த தொடரின் வட்டாரத்தில் சிலர் தெரிவித்தாலும், நடிகர் குமரன் தொடரை விட்டு விலகினார் என்றும் கதிர் கதாபாத்திரத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் நடிக்கப்போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. எது உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.