‘சசிகலா அதிமுக கொடியை அகற்றாவிட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ – காவல்துறை எச்சரிக்கை!!

0

பெங்களுருவில் இருந்து இன்று தமிழகத்திற்கு வரும் சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பறக்கவிட்டு வருகிறார். இதனை தமிழக எல்லையில் வைத்து அகற்ற வேண்டும் என்றும் அப்படி செய்யவில்லை என்றால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.

சசிகலா:

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27ம் தேதி அன்று விடுதலை பெற்றார். பின்பு கொரோனா வைரசால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நலமானதால் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பெங்களுருவில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார். இதற்கிடையில் அவர் மருத்துவமனையில் இருந்து பெங்களூரு இல்லத்திற்கு செல்லும் பொழுது அவரது காரில் அதிமுக கொடிபறக்கவிடப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் பல சர்ச்சைகள் கிளம்பியது. மேலும் அதிமுக அமைச்சர்கள் போலீசில் இதுகுறித்து புகாரும் அளித்துள்ளனர். இந்நிலையில் இன்று தமிழகத்திற்கு சசிகலா வருகை தரவுள்ளார் என்று ஏற்கனவே தினகரன் அறிவித்திருந்தார். இந்நிலையில் பெங்களூரு இல்லத்தில் இருந்து தமிழகத்திற்கு கிளம்புவதற்கு முன்பாக அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர்களை தூவி மரியாதையை செலுத்தியுள்ளார் சசிகலா.

#INDvsENG டெஸ்ட் – 6 விக்கெட்களை இழந்து தவிக்கும் இந்திய அணி!!

இவரை தொடர்ந்து தினகரனும் தனது மரியாதையை செலுத்தியுள்ளார். தற்போது அவர் தனது காரில் அதிமுக கொடியை பறக்கவிட்டு தமிழகத்திற்கு வருகிறார். இந்த தகவலினால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழக காவத்துறை சசிகலாவிற்கு ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி சசிகலா தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடியில் அதிமுக கொடியை தனது காரில் இருந்து அகற்றவேண்டும். அதற்காக அவருக்கு காலஅவகாசம் வழங்கப்படும் அப்படி அவர் அகற்றவில்லை என்றால் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here