விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் சீரியலை விட்டு விலக போவதாக செய்திகள் வெளியானது. அதற்கு விளக்கமளித்து குமரன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அது வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்ப ஒற்றுமையை முன்னிறுத்தி எடுக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வந்தது. சினிமாக்களிலும் அண்ணன் தம்பி பாச கதைகள் அனைத்தும் ஹிட் அடித்தது போல சீரியலில் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹிட் அடித்தது. நாட்கள் செல்ல செல்ல கதிர் முல்லை ஜோடிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சித்துவின் நடிப்பும் கதிரின் எதார்த்த பார்வையும் மக்கள் மனதை கொள்ளை கொண்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது சித்ரா தற்கொலை செய்துகொண்டதை அடுத்து பல பலரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை வெறுத்து வந்தனர். இப்பொழுது முல்லை கதாபாத்திரத்தில் காவியா நடித்து வருகிறார். ஓரளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்க தற்போது திடுக்கிடும் தகவலாய் கதிர் சீரியலில் இருந்து விலக போவதாக வதந்திகள் பரவியது.
பிக் பாஸிற்கு பிறகு விஜய் டிவியில் களமிறங்கும் அனிதா சம்பத் – இணையத்தில் கசிந்த தகவல்!!
இதனை கேட்ட பலரும் ஷாக் ஆகினர். இப்போ கதிரும் போயிட்டா சீரியல் நிலைமை என்ன ஆகுறது?? என புலம்பும் வந்தனர். இந்த கதிர் கதாபாத்திரத்தில் அஸ்வின் நடிக்க போவதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் கதிர் இதற்கு விளக்கமளிக்கும் விதமாக ஓரு ஸ்டோரியை ஷேர் செய்துள்ளார். அதாவது கதிர் கதாபாத்திரத்தை நினைவூட்டும் விதமாக தனது ருத்ராட்ச மாலை மற்றும் என்ட்ரி கொடுப்பது போலவும் போஸ்ட் செய்துள்ளார். இதனை பார்த்த பிறகு தான் பலரும் நிம்மதியடைந்தனர்.