விவசாய போராட்டங்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக கூறி 1,178 ட்விட்டர் கணக்குகளை முடக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து ட்விட்டர் நிறுவனம் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் நிறுவனம் பேச்சுவார்த்தை
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாட்டு மக்கள் பலரும், உலக பிரபலங்களும் சமூகவலைதளத்தில் தங்களது ஆதரவை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் போராட்டம் குறித்து சமூகவலைதளத்தில் சிலர் தவறான தகவல்களை பரப்புவதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகளை முடக்கம் செய்ய அந்நிறுவனத்துக்கு வலியுறுத்திவருகிறது மத்திய அரசு.
கிரிக்கெட் போட்டிகளை ட்ரோன் மூலம் படம்பிடிக்க முடிவு – நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி!!
முன்னதாக ‘விவசாயிகள் இன அழிப்பு’ என்ற ஹாஷ்டேக் மூலம் மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதாக கூறி 250 ட்விட்டர் கணக்குகளை முடக்கம் செய்ய கூறி ஏற்கனவே மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக, பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தவறான கருத்துக்களை சமூகவலைதளத்தில் பதிவிடுவதாக குற்றம் சாட்டியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ட்விட்டர் நிறுவனம் முடக்கப்பட்ட கணக்குகளில், 250 கணக்குகளை மீண்டுமாக பயன்படுத்துவதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனை எச்சரித்த மத்திய அரசு, ட்விட்டர் நிறுவனத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை செய்ய அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. மேலும் பொதுமக்களின் கருத்துக்களை பாதுகாக்கவும், அதே நேரத்தில் மத்திய அரசின் பரிந்துரையை குறித்து பரிசீலித்து வருவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.