பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்திடம் முல்லை அனைத்து விஷயங்களையும் சொல்லி விட வீடே ரணகளமாகிறது, மூர்த்தி இனிமேல் தன் முகத்திலேயே முழிக்க கூடாது என்றும் சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸஸ்டோர்ஸ் சீரியலில் கஸ்தூரி முல்லைக்கு கால் செய்து திட்ட அவருக்கு கோவம் வந்து கண்ணனை திட்ட தனம் பார்த்து விடுகிறார். தனம் என்ன நடந்தது என்று மீண்டும் மீண்டும் கேட்க முல்லை அனைத்து விஷயத்தையும் சொல்லி விடுகிறார்.
இதனால் தனம் உச்சகட்ட அதிர்ச்சியில் உள்ளார். மேலும் மூர்த்தி வந்ததும் அனைத்து விஷயங்களையும் சொல்லி விடுகின்றனர். இதனால் கோவமடையும் மூர்த்தி கதிரை அறைந்து விடுகிறார். இனிமேல் எங்க மூஞ்சியில் முழிக்காத என்று சொல்கிறார்.
அடுத்ததாக ஐஸ்வர்யா கிளம்பாமல் இருக்க கஸ்தூரி வந்து கண்டபடி திட்டுகிறார். அப்பொழுது வரும் பிரஷாந்த் உனக்கு கல்யாணம் ஆன உடனே எல்லாமே இருக்கு. நீ ரொம்ப பேசிட்ட இனி என் ஆட்டத்தை பார்க்க போற என்று மிரட்டுகிறார்.
ஐஸ்வர்யாவிற்கு எதோ தவறாக படுகிறது. வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என்று யோசிக்கிறார். கண்ணன் ஐஸ்வர்யாவை நினைத்து அழுது புலம்புகிறார். தன்னால் எதுவுமே செய்ய முடியவில்லையே என்று புலம்புகிறார்.
கண்ணனும் ஐஸ்வர்யாவும் ஒரு இடத்தில் சந்திக்கின்றனர். ஐஸ்வர்யா கண்ணன் மீது கோவமடைகிறார். தன் நிலைமையையும் கண்ணன் எடுத்து சொல்கிறார். அடுத்ததாக கஸ்தூரி ஐஸ்வர்யா காணாமல் போனதற்கு கண்ணன் தான் காரணம் என்று வீட்டு வாசலில் வந்து கத்துகிறார்.