ஒன்றரை ஆண்டுக்கு பின் சுற்றுலா தளங்களை திறக்கும் சவுதி அரேபியா அரசு. பல கட்டுப்பாடுகளுடனும் விதிமுறைகளை பின்பற்றியும் தடுப்பூசி செலுத்தி கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே அனுமதிக்க முடிவு செய்துள்ளது.
மீண்டும் சுற்றுலா தளங்களை திறக்கும் சவுதி அரசு…
கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் அதிகளவில் பாதிப்படைந்தது. மக்களும் அதிகளவில் அச்சம் அடைந்திருந்தனர். இந்த நோய் தொற்றின் பரவல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் மிக பயங்கரமான கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. அதுமட்டுமில்லாமல் தன நாட்டிற்குள்ள வேறு நாட்டினரை உள்ளே வர அனுமதிக்கவில்லை. ரயில் சேவைகள் மற்றும் விமான சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. கொரோனா நோயின் பரவல் காரணமாக அதிக கட்டுப்பாடுகள் விதிமுறைகளையும் விதித்து இருந்தது, பயணிகள் மற்றும் வெளிநாட்டினரை சவுதி அரேபியா நாட்டிற்குள் உள்ளே வர அனுமதிக்கவில்லை. இந்நிலையில் கொரோனா நோய் பரவலை பல போராட்டத்திற்கு பின் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
அதனால் சவுதி அரேபியா அரசு ஒன்றரை ஆண்டிற்கு பின் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து சுற்றுலா தளங்கள் அனைத்தையும் திறக்க முடிவு செய்துள்ளது தன் நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களையும் கட்டுப்பாடுகள் விதிமுறைகளுடன் மீண்டும் திறக்க செளதி அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 49 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் செளதி அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்குமுன் ரெட் அலெர்ட்டில் இருந்த நாடுகளுக்கு சென்ற குடிமக்களுக்கு 3 ஆண்டுகளுக்கு பயணத் தடை விதிப்பதற்கான அறிவிப்பை கடந்த வாரம் சவுதி அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்