பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா தான் கண்ணனை காதலிப்பதாக சொல்லியும் பிரஷாந்த் பிடிவாதமாக ஒரே வாரத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
மூர்த்தி வீட்டிற்கு கஸ்தூரி, ஜெகா மற்றும் மல்லி அனைவரும் சென்று ஐஸ்வர்யா பிரசாந்தின் திருமண விஷயத்தை பற்றி பேசுகின்றனர். இதனை கேட்டு கண்ணன் ஷாக்காகிறார். அதுவும் ஒரே வாரத்தில் திருமணம் என்று சொன்னதும் கண்ணனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
ஐஸ்வர்யாவிற்கு பல தடவை கால் செய்ய மொட்டை மாடிக்கு சென்று கால் அட்டண்ட் செய்கிறார். பிரஷாந்தும் பின்னாடியே வருகிறார். என்ன ஐஸ்வர்யா ஆச்சு என்று கேட்பதற்குள் பிரஷாந்த் வந்து போனை வாங்கி கண்ணனை திட்டுகிறார். மேலும் நிச்சயம் பண்ணி எல்லாரையும் கல்யாணத்துக்கு கூப்டா நீ கண்ணனை லவ் பண்றேன்னு சொல்லுவ உடனே நான் கல்யாணத்தை நிறுத்தணுமா?? நான் என்ன கேனையா?? என்று சொல்கிறார்.
எனக்கு வேணும்னா கண்டிப்பா வேணும் என்று சொல்கிறார். ஐஸ்வர்யா என்ன செய்வது என்று தவித்து கொண்டுள்ளார். கண்ணன் இது தான் சமயம் எப்படியும் ஐஸ்வர்யா விஷயத்தை வீட்டில் சொல்லி விட வேண்டும் என்று நினைக்கிறார். அப்பொழுது கல்யாண விஷயத்தை பற்றி ஜீவா, கதிர் பேசிகொண்டுள்ளனர்.
மேலும் மூர்த்தி தான் இந்த கல்யாணத்தை நடத்தி வைக்க போகிறார் என்று சொன்னதும் கண்ணன் மேலும் ஷாக்காகிறார். எப்படியும் இன்னைக்கு விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும் என்று சொல்கிறார். கண்ணன் முகத்தை பார்த்து அனைவரும் என்ன பிரச்னை என்று கேட்கின்றனர்.
மூர்த்தி அவனுக்கு ஏதோ காசு தேவைப்படுவதாக சொல்கிறார். தனதிற்கு எதோ தவறாகப்படுகிறது. தனத்தின் அம்மா தேவையில்லாமல் யாரை பற்றியும் கவலைப்படாதே என்று சொல்ல கண்ணன் அங்கிருந்து சென்று விடுகிறார். கஸ்தூரி வீட்டில் திருமணத்திற்கான வேலைகளை பார்த்து கொண்டுள்ளனர்.
மேலும் மதுரைக்கு கிளம்புவதாக சொல்ல ஐஸ்வர்யா ஷாக்காகிறார். எப்படி இதிலிருந்து தப்பிப்பது என்று யோசித்து கொண்டுள்ளார். இதனை கண்ணனிடம் சொல்ல எப்படி இதிலிருந்து தப்பிப்பது என்று யோசித்து கொண்டுள்ளார் கண்ணன். கண்ணனிடம் பேசுவதை கஸ்தூரி பார்த்து விடுகிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்